த.தே.கூ அறிவூப்பூர்வமான, சிறந்த முடிவினை எடுத்துள்ளது, அவர்களுக்கு நமது ஆதரவினை வழங்குவோம்


சரியோ, தவறோ. 2 கொலைகாரன் யாரவது வரப்போவது உறுதி, அதில் எவனிடம் அதிகப்படியான சலுகைகள் நாம் பெற்று கொள்ள முடியும் என்பதே இப்போதைய சிறந்த வழி. த.தே.கூ வாழ்த்துகள். தயவு செய்து பிரச்சாரம் எதுவும் பண்ண வேண்டாம், எந்த மூஞ்சினை வைத்து கொண்டு இவனுக்கு ஓட்டு கேட்க முடியும்.



மூன்று முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் கூட்டமைப்பு ஆதரவு – தேசிய தேசப்பற்றுள்ள இயக்கம்

பதிந்தவர்_மீனகம் ON JANUARY 6, 2010
பிரிவு: செய்திகள்
சரத் பொன்சேகாவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து என  தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிக்கி்ன்றது. இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் இணைப்பாளர் குணதாஸ அமரசேகர இதனை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கை ஒன்றிணைத்தல் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் போன்ற காரணங்களை முன்வைத்தே அவர்கள் ஆதரவு வழங்குவதாக அவர் அங்கு சுட்டிக்காட்டினார். இதேபோன்றதொரு ஊடகவியாலளர் மாநாட்டை ஜே.வி.பியின் பொதுச் செயலாளர்  ரில்வின் சில்வா நடாத்தினார்.
அதில்  அவர் கருத்து தெரிவிக்கையில் சரத்பொன்சேகாவின் சில யோசனைகளுக்கு கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தாகவும், அதன்படி இடம்ட பெயர்ந்தவர்களை விரைவாக மீளக்குடியமர்த்தல், அவர்களுக்கு நிரந்தர வதிவிடங்களை அமைத்தல் மற்றும் தேவையற்ற அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் போன்ற யோசனைகளையே ஜெனரல் சரத்பொன்சேகா முன்வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.
— மீனகம் செய்தியாளர்



Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    ithuvum oru pizhaippa? tho tho

    loosada nee

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails