தினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்

இந்த பொறுக்கிகள் தமிழர்களை அழித்தது காணது என்று இன்னும் பழி வாங்க நினைக்கும் இந்த பாப்பனை எதை வைத்து அடிப்பது. இவனை போன்றவர்கள்தான் இன்று நாம் வெறுக்கும் பாப்பனின் அருவருக்கதக்க செயல்களுக்கு காரணமாக, காசு வாங்கிட்டு மாமா வேலை பார்க்கிறது. இப்படி எழுதறதை பார்க்க எரிகிறது, இவனெல்லாம் மனுசனாகவே இருக்க முடியாது. மிருகம் ராசபக்சேயை விட் மோசமான கரு நாகம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17799


குண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு ; புலி ஆதரவாளர்கள் கைவரிசை; 2 ஆயிரம் பேர் உயிர் தப்பினர்

Posted in | 0 comments

கருவறையில் பெண்களை வசியம் செய்தது எப்படி? -அர்ச்சகர் தேவநாதன் ஓப்பன் பேட்டி! நக்கீரன்

னது கருவறை லீலைகளால் அதிரவைத்த தேவநாதனின் பெயர்... உலக மகாஅயோக்கியர்களின் பட்டியலில் பரபரப்பாக இடம்பிடித்து... இணையதளங்கள் வரைஅடிபட்டுக்கொண்டிருக்கிறது. கோயில் கருவறைப் பக்கம் போகவே பெண்கள்அச்சப்படும் அளவிற்கு... ஒருவித பீதியை உண்டாக்கியிருக்கும் தேவநாதன்...தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான். சிறை அனுபவம் அவனைபதப்படுத்தியிருக்கிறதா...? செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும்மனநிலைக்கு அவன் வந்திருக்கிறானா என்பதை எல்லாம் அறிய அவனை சந்திக்கமுடிவெடுத்தோம்.

காஞ்சிபுரத்தில் தலைகாட்ட பயந்து... தனது சொந்த கிராமமான சீவரத்தில் தங்கியிருக்கும் அவனை பெரும் முயற்சி எடுத்து சந்தித்தோம்.

ஆள் உச்சந்தலை குடுமியை கட் பண்ணிவிட்டு கிராப்பில் டிப்டாப்பாகஇருந்தான். போதாக்குறைக்கு வீரப்பன் மீசை வளர்க்க... முகத்தில் ரோமம்ஒதுக்கியிருந்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாததைக்கண்டு திகைத்த நாம்...

நீ செஞ்சதெல்லாம் தப்புன்னு தோணலையா? என்றோம்.

அலட்சியச் சிரிப்பொன்றை உதிர்த்த அவன் """லோகத் தில் நடக்காததையா நான்செஞ்சுட்டேன். விடுங்கோ... என்னமோ வழக்குப் போடறாளாம். போட்டு என்னத்தைக்கிழிக்கப்போறா? போலீஸ் போட்ட வழக்கெல்லாம் எனக்கு ஜுஜுபீ. எல்லாத்தையும்உடைச்சிக் காட்டறேன் பாருங்கோ'''என்றான் தெனாவெட்டாகவே.

இப்படியெல்லாம் பேசற தைரியம் உனக்கு எப்படி வந்தது? என்றோம்.

""ஒரு தடவை ஜெயிலுக்குப் போனா... தைரியம் மட்டுமல்ல; உலகத்தில் எதுவும்தப்பில்லைங்கிற ஞானமும் பிறக்கும்''''-இப்போதும் அவனிடம் அதே அலட்சியசிரிப்பு.

சரி... உன் விருப்பங்களுக்கு எப்படி அந்தப் பெண்கள் உடன்பட்டாங்க?''-இது நாம்.

""எப்படிங்க பொம்மனாட்டி தானா உடன்படுவா? கனியாததை நாமாதான் கனியவைக்கணும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டெக்னிக்கை பயன்படுத்தவேண்டியிருக்கும். பிரைன்லதான் க்ரைம் இருக்கு. புத்தியைப்பயன்படுத்தணும். எனக்கு அந்த மச் சேஸ்வரர் கோயில்ல ஆரம்பத்துல 175ரூபாதான் சம்பளம் கொடுத்தா. அது கடைசியா 300 வரைதான் உசந்துச்சு. இதுலஎப்படி காலந்தள்ள முடியும்? பார்த்தேன்... பிரதோஷ நாள்ல ஸ்பெஷல் பூஜைபண்றதை பிரபலப்படுத்தினேன். பெண்கள் கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சிது.தட்சணையும் குவிய ஆரம்பிச்சிது. வர்றவா ஒவ்வொருத்தரையும் கவனிப்பேன்.சின்னதா சிரிச்சி... க்ஷேமம் விசாரிச்சி... அவாளுக்கு ஆதரவா ரெண்டுவார்த்தை பேசுவேன். உடனே அவா நம்மோட ஆறுதலான பேச்சுக்காகவே கஸ்டமராஆய்டுவா. அப்புறம் அவாக்கிட்ட பரிகார பூஜை.. அந்த பூஜை இந்த பூஜைன்னுஎதையாவது சொல்லி... வசூலை அதிகமாக்கிக்குவேன். இப்படி புத்திய யூஸ்பண்ணி... வருமானத்தைப் பெருக்கின்டேன்'''என்றான் ஆர்வமாக.

சரி! சரி...! குடும்பப் பெண்களைக்கூட எப்படி வசியம் பண்ணினே?'என்றோம்அவனது டெக்னிக்கை பெண்கள் எச்சரிக்கை யாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றஎண்ணத்தில்.

குபீரென உற்சாகமான தேவநாதன், ""எடுத்ததுமே லேடீஸ்கிட்ட நான்வழிஞ்சிடமாட்டேன். கள்ளங்கபடமில்லாத சிரிப்பை மட்டும் முதல்ல வீசுவேன்.அப்பதான் நம்பிக்கையா நெருங்குவாங்க. அப்புறம் ஆறுதலா அக்கறையாப் பேசி...உங்க பிரச்சினையை கண்டிப்பா பகவான் தீர்ப்பான்னு சொல்வேன். அந்தவார்த்தையைக் கேட்டதும் சிலிர்த்துப் போவாங்க. சிலபேர்... கண்ணீரோட அவங்கபிரச்சினைகளைச் சொல்லுவாங்க. அப்ப அவங்களுக்குப் பரிகார பூஜைகளைச் சொல்லிஅதை நடத்திக்கொடுப்பேன். அவங்க நட்பானதும் இடையிடையே அவங்களை வர்ணிக்கவும்தயங்கமாட்டேன்.

முதல்ல என்கிட்ட விழுந்தது தாராபாய்தான். ஆத்துக்காரர் லெக்சரர்.பாக்கும்போதெல்லாம் பெருமூச்சு விட்டு.. ரம்பை... திலோத்தமையெல்லாம்தோத்துப்போய்ட்டாளுகன்னு வர்ணிப்பேன். இதிலேயே பாதி கிறங்கிப்போய்ட்டா.ஆனாலும் தொடவிடலை. ஒருநாள் ஹன்ஸ் புகையிலையை உருட்டி.. இது ஸ்பெஷல்பிரசாதம்னு கொடுத்தேன். வாயில் போட்டதும் கிறுகிறுன்னு வருதுன்னு கீழேஉக்கார்ந்துட்டா... அப்படியே கைத்தாங்கலா தோளில் சாய்ச்சிக்கிட்டுகருவறைக்குள் கொண்டுபோய்ட்டேன். செல்போனால் படமும் எடுத்தேன்.இதைக்காட்டியே பலதடவை பல இடத்துக்கும் கூட்டிட்டுப்போனேன்.

அடுத்து விழுந்தது கலா ராணி. புருஷன்காரருக்கு சுக வீனம்.சொல்லிக்குறைபட்டுக் கிட்டா. கோயில் கருவறையில் உறவு வச்சுண்டா.. தோஷமெல்லாம் நீங்கும்னு சொன்னேன். தயங்கின கலாவுக்கும் வழக் கம்போல புகையிலைஉருண்டை கொடுத்தேன்.

அப்புறம் சிவகாமிங்கிற அபிதா. கல்யாணமாகலைங்கிற ஏக்கத் தில் கோயிலுக்குவருவா. ஒருநாள் அவளைக்கூப்பிட்டு உன்னை ரெண்டா வதா தொடுறவந்தான் உனக்குப்புருஷனா ஆவான்னு சொன்னேன். ஐய்யய்யோன்னு திகைச்சுப்போய் நின்னவகிட்ட உன்னைஇதுவரை யாராவது தொட்டிருக்காளான்னு கேட் டேன். ச்சே... இல்லைன்னு கூச்சப்பட்டா. ஒருத்தன் தொட்டாத்தான் ரெண்டாவதா புருஷன்காரன் வாய்ப் பான்னுதொட்டேன். அதுக்கு அடுத்து... ராஜம்பேட்டை வள்ளி. புருஷனுடன் சச்சரவுன்னுகோயிலுக்கு வந்தா. பரிகார பூஜையை கருவறைக்குள் வந்து பண்ணுன்னுகூட்டிட்டுப்போய் ஹன்ஸ் உருட்டிக் கொடுத்தேன். இப்படி ஏகப்பட்ட பேரை ஆண்டுஅனுபவிச்சாச்சு'' என்றான் தன் சீச்சீ அனுபவங்களுடன்.

சரி... அவங்களை அதோட விடாம ஏன் போட்டோவெல்லாம் எடுத்தே?'என்றோம் மண்டிவந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு.

அவனோ ""சின்னவயசில் இருந்தே அந்த மாதிரி படம் பார்ப்பேன். அதில் ஒருவிதகிக் இருக்கு. பொதுவா ஒரு பொண்ணு மேல ஏற்படும் ஆசை ஒரு தடவையோடதீர்ந்துடாது. திரும்பத் திரும்ப பாக்கணும்... அடையணும்னு தோணும். அந்தஆசைக்காகத்தான் படம் எடுத்தேன். ஆனா அப்படி எடுத்த படம்..திரும்பத்திரும்ப அவாளை இஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம் கூப்பிட வசதியாஇருந்தது'''என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

-பிரகாஷ்

Posted in | 0 comments

ராஜபக்சே போர்க் குற்றவாளி, மக்கள் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:குமுதம்




'லநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’’ என்ற பழமொழி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே விஷயத்தில் பலித்தே விட்டது.  புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே தற்போது போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்ப ட்டிருக்கிறார். ‘யார் இந்தப் பூனைக்கு மணி கட்டியது?’ அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் உள்ள மக்களின் நிலையான நீதிம ன்றம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ள து.

கடந்த 14 மற்றும் 15-ம் தேதியில் நடந்த இலங்கை அரசுக்கு எதிரான அந்த விசாரணையில், ஐ.நா. குழுவின் பேராசிரியர் பிரான் சுவா ஹுராட், இந்தியப் பிரதிநிதியான உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார், எகிப்திய எழுத்தாளரான ஐ.நா.வின்  ஆலோசகர் நவல் அல் சடாவி மற்றும் மூன்று பெண்கள் உள்பட பதினொரு பேர் நீதிபதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதில் இலங்கை அரசு மீதான போர்க் குற்றங்கள்,  தமிழினப் படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், மனித  உரிமை மீறல்கள், சரணடைந்த மக்கள் மீதான வன்முறைகள், தடை செய்யப்பட்ட நச்சு வாயு மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளைப்  பயன்படுத்தியது, மருத்துவமனை மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த போர்க் குற்றங்களை நிரூபிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், தமிழ் மக்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்ளும்  காணொளிக் காட்சிகள், மக்களின் நேரடி சாட்சியங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. போர் நிறுத்த கண்காணிப்புப்  படைத் தலைவரான எரிக்சன் அளித்த சாட்சியங்களின்படியும் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அந்த  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 இந்தச் செய்தி, தமிழுணர்வாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அந்நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த் தவரான லண்டனில் உள்ள உலக சமாதான ஆதரவுக் குழுத் தலைவர் குணபாலசிங்கத்திடம் பேசினோம். ‘‘தமிழீழ விடுதலைப்  புலிகள் இயக்கத்துக்கு முதன்முதலில¢ இந்திய அரசு தடை விதித்த நிலையில், அதைத் தொடர்ந்து  மேற்குலக நாடுகள்  புலிகளுக்குத் தடை விதித்தன.   அதனாலேயே அந்தப் போரில் புலிகள் சரிவைச் சந்தித்தனர். இன்றைக்குத் தீவிரவாதிகள் என்று  கூறப்படுபவர்கள்தான் நாட்டின் விடுதலைக்குப்பின் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள். இதுதான் உலக நியதி.

 டப்ளின் நகரில் நடந்த விசாரணையின் போது, ‘அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசுக்கு இந்தியா,  பாகிஸ்தான், ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி வழங்கியது குறித்தும் அலசப்பட்டது.  இலங்கைக்கு உதவிய இந்த  நாடுகள் மீதும் ஐ.நா. சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் டப்ளின் நீதிமன்ற விசாரணையில்  கருத்துத்  தெரிவிக்கப்பட்டது’’ என்றார் அவர்.

இலங்கைத் தமிழ் பிரமுகரான மறவன்புலவு க.சச்சிதானந்தத்திடம் பேசினோம்.

‘‘ஈழப்போரில் தமிழர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும் உலக அரங்கில் சிங்கள அரசுதான் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆள £கியுள்ளது. அதற்கு டப்ளின் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பே முக்கியக் காரணம். இந்தத் தீர்ப்பு பன்னாட்டு மன்றத்தின்  (ஐ.நா.சபையின்) மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை மூலம் அந்தச் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூனிடம்  சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்  அவர்.
    
- ஆர்.எம்

Posted in Labels: | 0 comments

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் கொலைகாரர்கள், உடனே தடுத்து நிறுத்துவோம்

 
 
Vanakkam Uravugalae,
 
                                While we are actively participating in boycott srilanka campaign, our Chennai people have invited our enemy to treat them. Yes, the Chennai Super Kings cricket team has enrolled a new srilankan cricketer to play for their team. They already have quite a few srilankan cricketers signed for Chennai team.  Is this not a shame to our people? Is this not a disgrace to our Tamil society? The srilankan people who fired crackers on the fall of Tamil freedom fighters are now invited to share the business in Tamil Nadu.
 
If you want to show your anger, Tamils please sign up and send in your feedback to Chennai Super Kings stating that Tamils do not like Srilankans here. We can stick to same format given below. Click the link to post.
 
 
 
 
To
The Organiser,
Chennai Super Kings
Chennai
 
Dear Sir,
 
                     Please be aware that Tamils all around the world are actively participating in boycott Srilanka campaign. This is because of the injustice meted out to Tamils for the past 60 years by the chauvinistic Srilankan government. We Tamils do not encourage any relations with Srilanka whether it is political, economical or sporting relationship until we Tamils get our justice and equal rights in the island.
 
In regard, we request you sever your ties with the Srilankan cricketers and please abandon any contracts with Srilankan cricketers who play for Chennai Super Kings cricket team. Your action will support millions of Tamils across the world who continuously protest against Srilanka for their war crimes. Already Srilanka has been labeled as war criminals by the Peoples Tribunal in the court of Dublin. Therefore please do not hesitate to remove these blood stained Srilankan cricketers from the Chennai cricket team. If you fail to do so, then we Tamils will be forced to boycott all your cricket matches and also would start protesting  more seriously.
 
Thanking You,
 
 
 
 




--
-- Rathish

உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...!
- சேகுவேரா

Posted in | 1 comments

"கருணாநிதியின்" இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது: கவிஞர் புலமைப்பித்தன்

தமிழக முதல்வர் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பின்னடைவு வந்திருக்காது என்று கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான நேற்று கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றவரும், தமிழீழ விடுதலைக்கு உந்து சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதி அறிமுகாம் ஆகினோன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று இல்லாமல் போனது தமிழினத்திற்கு எவ்வளவோ பெரிய பேரிழப்பு மனிதநேயத்தினுடைய மிக உயர்ந்த உன்னதத்தை பெற்றவர்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுடன் நெருக்கமான உறவினைக்கொண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்க தமிழ்மக்களுக்காக செயற்பட்டார். இப்படிப்பட்டவரை இழந்து இன்று தவிக்கின்றோம். இன்நிலையில் சிறீலங்காவின் வெற்றி என்பது ஆறுநாடுகள் கூட்டாக சேர்ந்து நிகழந்துபோன நிகழ்வு.

இந்தியாவின் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் கடற்படையின் முழுமையான பங்களிப்புக்கள் எல்லாம் இதில் உண்டு தமிழக முதல்வர் கருணாநிதி தன்னுடைய ஆட்சியினை காப்பாற்றுவதற்காக இந்திய அரசினை தாங்கிப்பிடிக்கவேண்டிய நிலைக்கு உள்ளானார்.

இந்தியஅரசு சிறீலங்காவிற்கு பல்லாயிரம் கோடி பணத்தினை கொடுத்தது, ரேடர் கொடுத்தது என்ன உதவிகள் செய்யவேண்டுமோ அனைத்தையும் கொடுத்து தமிழீழ மக்களை கொன்று குவிப்பதற்கு பெரும் காரணமாக இருந்தது.

கருணாநிதியின் இடத்தில் புரட்சித்தலைவர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது. தமிழ் மக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்காது, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்அவர்களின் மறைவானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தாக்கத்தனை ஏற்படுத்தியுள்ளது என்று கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.

--
தோழமையுடன்......
Muthuraja.I


Posted in | 2 comments

தெலுங்கர்களுக்கு இவ்வளவு சொரணை வருவது எப்படி? உப்பா? காரமா?

தெலுங்கர்களிடம் எனக்கு பிடித்த விடயம் எந்த சமரசத்திற்க்கும் போகாமல் கடைசிவரை போராடுவது.. இன்று தனிதனி மொழிபேசும் தேசியங்கள் உரிமையோடு வாழ்வதற்கு வழி சமைத்தவர் ஒரு தெலுங்கரே.. இன்று தமிழன் தமிழ்நாடு என்று மார்தட்டி கொள்வதற்கு காரணம் அவர்களே.. மொழிவாரி இனங்களை பிரிக்க கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து அவர்கள் லட்சியத்தை அடைந்தார்கள்..நமக்கும் வழி செய்து கொடுத்தார்கள்..யோசித்து பாருங்கள் இவ்வாறு இல்லாவிட்டால் நாம் இன்று கன்னடமோ தெலுங்கோ மலையாளமோ பேசி கொண்டு திரிந்து இருப்போம்..

நிற்க நாம் கூறவருவது.. தற்போது நடைபெற்றுவரும் தெலுங்கான போராட்டம்..அது கெட்டதா ? நல்லதா? என்ற ஆய்வுக்குள் செல்ல விரும்பவிலலை ..ஆனாலும் அந்த மக்களின் ..தலைவர்களின் போராட்ட குணத்தை பாருங்கள்.. இன்று மொத்த ஆந்திராவே கொந்தளிக்கிறது..10 நாட்களுக்கு மேலாக அரசு பணிகள் முடக்கம்.. மாநில ,மத்திய அரசினால் கூட கட்டுபடுத்த முடியாத தன்னார்வ எழுச்சி..

சற்றே நமது மாக்களை நினைத்து பாருங்கள்.. மானாட மார்பாட காணவில்லை என்றால் மறுநாள் எவனுக்கு வெளியில் வருவதில்லை..இரவு 11 12 மணிவரை தொல்லை காட்சிகளில் வரும் தொடர் நாடங்களை காணாமல் எந்த பெண்ணும் தன் கணவனை தொடக்கூட விடுவதில்லை..சொந்த வீட்டில் நிலைமை இவ்வாறு இருக்க.. இந்த சினிமா காரர்களின் அட்டகாசம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.. நடிகன -ரசிகன் என்ற மன நிலை மாறி தலைவன் - தொண்டன் என்று 10 படங்களில் தொடர்ந்து நடித்தால் வந்து விடுகிறது.. பெரும்பால ரசிக அடிப்பொடிகளின் நிலையை பாருங்கள்.. தலைவா! பல கோடி(?) தொண்டர்கள் இருக்கிறோம்.. எங்களை நீதான் வழி நடத்தவேண்டும்.. அவர் வழி நடத்த வில்லை என்றால் இவன் போய் சுடுகாட்டில் குடும்பத்தோடு படுத்து கொள்வான் போலிருக்கிறது.. இவ்வாறான தொடர்ந்து எந்த விடயத்திலும் சுயமாக முடிவெடுக்க தெரியாமல் ..தொடர்ந்து யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டும்.. அடிமைக்கு அடிமை புத்திதானே வரும்..யார் தலையிலாவது பொறுப்பை கட்டி விட்டு வீட்டுக்கு போய் இழுத்து படுத்து தூங்கினால் எவன் நம்மை மதிப்பான்?


இது போகட்டும் நமது அரசியல் வியாதிகளை தனியே எடுத்துகூற நமக்கு அவசியமில்லை உப்புதாள் போட்டு தேய்த்தாலும் சொரணை வருவது கடினம்.. என்றாலும் பின்வரும் படங்களிலும் செய்திகளிலும் உள்ள ஒப்பீட்டை உணருங்கள்

ஆந்திரா:

-நாளை சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்
- தெலுங்கானாவில் பெரும் பதட்டம்- தமிழக லாரிகள் அனைத்தும் நிறுத்தம்..
- ஆந்திராவில் தொடர்ந்து கலவரம்: தமிழக பஸ்கள் நிறுத்தம்-திருப்பதியில் கூட்டம் குறைந்தது!

- ராவ்-விஜயசாந்தி ராஜினாமா 82 எம்எல்ஏக்கள் விலகல்!
- தொடரும் வன்முறை: ரோசய்யா டென்ஷன்-எச்சரிக்கை!
- மாணவர்களின் மாபெரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி - ராவ்
-அமைகிறது தெலுங்கானா - முற்றுகைப் போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றம்
- பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா...
-மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை - ராவ்

[img]http://beta.thehindu.com/multimedia/dynamic/00015/IN03_TRS_15598f.jpg[/img]





தமிழ்நாடு:
இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது-கருணாநிதி
ஈழ உறவுகளை காக்க வேண்டி மனித சங்கிலி அனைவரும் கலந்து கொள்க!
ஈழத்திற்காக நாளை கடை அடைப்பு..
40 எம்பிக்களும் ராஜினாமா(?) செய்வார்கள்..
மெரினா கடற்கரையில் திடீரென உண்ணா விரதம்..
நான் கைகாட்டும் அரசு அமைந்தால் ஈழத்திற்கு படை அனுப்பி வைத்துவிட்டுதான் மறுவேலை-ஜெயலலிதா..
முல்லை பெரியாறு பிரச்சனை- உச்சநீதிமன்றம் கண்டிப்பு..உண்ணாவிரதத்தை கைவிட்டார் கருணாநிதி
உண்ணாவிரதத்தை கைவிட்டார் திருமா..
ஈழம் :ரத்த ஆறு ஓடும்-வைகோ..
நான்கே நாட்களில் ஈழதமிழருக்கு விடுதலை(முள்கம்பி சிறையிலிருந்தா? ஈழமா?)வாங்கி தந்த தலைவர் வாழக!

[img]http://transcurrents.com/tc/MKTC0427.jpg[/img]








[img]http://i4.ytimg.com/vi/SyHvvkBU1JM/default.jpg[/img]




[img]http://www.uktamilnews.com/wp-content/uploads/2009/10/cpi3.jpg[/img]





[img]http://www.tamilnet.com/img/publish/2008/10/02_10_08_cpi_04.jpg[/img]








[img]http://www.tamilnet.com/img/publish/2009/01/17_01_09_01_thiruma_front3.jpg[/img]

[img]http://i48.tinypic.com/20kpvl0.jpg[/img]






பின்குறிப்பு: நான் தெலுங்கனோ,மலையாளியோ கன்னடனோ கிடையாது.. எந்த ஓட்டு பொறிக்கிகளின் தொண்டனும் இல்லை.. 5000 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மூத்த இனம் அடிமையாக வெறும் 60 ஆண்டுகால வரலாற்றை உடைய நாட்டிடம் வீழ்ந்து கிடப்பதை பார்த்து வேதனைபடும் ஒருவ

Posted in | 7 comments

ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்...




ஈழ பிரச்சனையிலும் சரி இந்த பிராந்தியத்தின் மற்ற பிரச்சனைகளிலும் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் பொந்தியாவின் அறிவியல் வளர்ச்சி..அணு ஆயுதவளர்ச்சி ..ரசாயண வளர்ச்சி என்று ஒரு மண்ணும் இல்லை.. பன்னி குட்டி போடுவது போல் மக்கள் சந்தை அல்லது மக்கள் கூட்டம்..

விளம்பரங்கள் மூலம் அவிழ்த்து போட்டு ஆடி .. நுகர்வு வெறியை மக்களிடம் தூண்டி வருகிறது கோகோ கோலா முதல் குண்டூசி வரை எவளாவது அரைகுறையோடு சொன்னால் தான் இங்குள்ள மாக்களுக்கு ஏறுகிறது.. இவ்வாறு அடிமைபடுத்த பட்ட மக்கள் சந்தையை இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு மாமாக்கள் .. இப்பிராந்தியத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடதவாறு மனிதாபிமானமுள்ள அந்தாந்த நாடுகளை நெருக்குகின்றன..

மற்றும் சில புத்திசீவிகள் இந்திய அரசியல் வியாதிகள் சரியில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மக்களை விழிப்படைய செய்வதன் மூலம் நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்கலாம் அதன் மூலம் ஒட்டு மொத்த(?) இந்தியாவின் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என்று புளுகுகின்றனர்..இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை சிறிது யோசித்து பாருங்கள். சுதந்திரம் அடைந்த மற்ற நாடுகள் எங்கோ போய் கொண்டிருக்க.. இவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அப்படியே தமிழ்தேசிய தோழர்கள் மற்ற மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய முடியுமா? செருப்பால் அடித்து விரட்ட மாட்டார்களா? இங்கு எவனும் தமிழனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மதிப்பதில்லை.. இந்த லட்சணத்தில் இது சாத்தியமா?

ஒன்று..

110 கோடி பேரை திருத்துவதும் அதன் மூலம் நல்ல அரசியல் வாதியை பெற்று கொள்வதும் தமிழ் தேசிய தோழர்களின் கடமை அன்று.. வேலை இல்லாதவன் பொண்டாட்டி தலையை சிரைத்த கதையாக .. வேலையில்லாதவனின் வேலை அது..
எது சுலபமான வழி? சொந்த மொழி பேசும் 7 கோடி சகோதர சகோதிரிகளை திருத்துவதா? மற்ற மாநில மொழி தெரியாமல் அவர்களை திருத்துவதா? சொந்த சகோதர்களை திருத்துவதே முதற்கடமை அதையே தோழர்கள் செய்துவருகிறார்கள்.

இரண்டு..

பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்துவதன் மூலம் மற்ற நாடுகளின் தலையீட்டை பெற்று கொள்வதன் மூலம் காவிரி ஒக்கேனககல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை காணலாம். ஆனால் மற்ற நாடுகளின் தலையிடாக்கொள்கைக்கு காரணம் முன்பு குறிப்பிட்டதை போல ஆட்டு மந்தை கூட்டமே.. இதை எப்படி கட்டுபடுத்துவது? என்ன செய்யலாம்? ஆட்டு மந்தை கூட்டத்தையே வில்லங்கமாக மாற்ற முடியுமா?கொகொ கோலாவில் கரப்பன் பூச்சி இருந்தது என்று வழக்கு தொடர்ந்தால் நம்மவர்(அரை சிங்களத்தி) ராதிகா சரத்குமாரே தொல்லை காட்சியில் வந்து அதெல்லாம் ஒன்றுமில்லை.. சுத்தமான சுகாதாரமான என்று புளுகுகிறார்.. இவர்களை எப்படி சமாளிப்பது என்று தோழர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

Posted in | 1 comments

காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்த எஸ்.வி.சேகர்



வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது.


ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுக்க அறிவித்ததைப் போலவே தி.மு,க.வினர் பதவி விலகியிருந்தாலும் காங்கிரஸ் விலகியிருக்காது என்று விவாதத்தின்போது சேகர் குறிப்பிட, காங்கிரசார் எந்த அளவுக்கு தமிழின விரோதிகள் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததற்காக நான் பாராட்டினேன்.


அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுக்க முயற்சித்தாரே தவிர, சேகராலேயே முதலில் சொன்னதை மாற்றிச் சொல்லமுடியவில்லை. அவர் சொன்னதற்கு அதைத் தவிர வேறென்ன அர்த்தம்? நாடக மேடைகளில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைப்பவர், தம் பங்குக்கு காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்தார். சேகரையெல்லாம்விட நம்மை அதிகம் சிரிக்கவைப்பவர், தங்கபாலு. சென்னையில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியொன்றில், காங்கிரஸ் தான் அரசியலை சேவையாகச் செய்கிறது என்று அவர் பேசியது, சேலத்துக்காரர்களுக்கும் கும்பகோணம் குசும்பு கைவந்த கலை என்பதைப் பறைசாற்றியது.


எம்.பி.யாகவும் இல்லாததால், வாணிமகால், நாரதகான சபா, ராஜா அண்ணாமலை மன்றம் என்று தங்கபாலு ஒரு ரவுண்ட் அடித்துவிடக்கூடாது. சேகர் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இன்னொருபுறம், ஈரோடு குப்புறக் கவிழ்த்தபிறகு, கார்த்தி சிதம்பரம், திருமகன் ஈவெரா, அருள் அன்பரசு போன்ற இளம் தியாகச் சுடர்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டதாக நாம் நினைத்த இளங்கோவனைத் திரும்பவும் பரபரப்பு அரசியலில் இறக்கிவிட்டிருக்கிறது பெட்ரோல் குண்டு.


இளங்கோவன் பழையபடி அறிக்கைவிட ஆரம்பித்துவிட்டார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார். தன்மானத் தலைவர் பட்டத்துடன் நகர்வலம் வர ஆரம்பித்துவிட்டார். பேனர் கிழிக்கக்கூட தயாராகிவிட்டார். அவர் வேறு என்னதான் செய்யமுடியும்...... கட்சிக்கும் தலைவரில்லை. மக்களவையிலும் உறுப்பினர் இல்லை. டெல்லிக்கும் சென்னைக்குமாய் பறந்து பறந்து பாலிடிக்ஸ் செய்த மனிதரை பெவிலியனில் உட்காரவைத்து ஆட்டத்தை வேடிக்கை பார்க்கச் சொன்னால் எப்படி? திருமாவளவனின் தயவால் சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் பார்டரில் தப்பித்தமாதிரி, ஈரோட்டில் தானுன் மயிரிழையில் தப்பிவிட முடியும் என்றுதான் இளங்கோவனும் நினைத்திருப்பார்.


அது வொர்க்கவுட் ஆகவில்லை. திருமாவளவன் புத்திசாலி. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும், அந்தக் கட்சித் தலைவர்கள்மீது வைத்திருந்த 'அபார' நம்பிக்கையால், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் படத்தைப் போட்டுத்தான் விளம்பரம் செய்தார். . இவரோ நேரம் காலம் தெரியாமல் 'முத்துக்குமாரா, அவர் யார்' என்று கேட்டார். நீ யார்- என்று திருப்பிக் கேட்டார்கள் ஈரோடு வாக்காளர்கள். ஒரு நேரத்தில் வாயாலேயே சோனியா காங்கிரஸை வளர்த்த பெரியாரின் பேரனை, இப்போது வாய் தான் வழுக்கி விழவைத்தது.


இன்னொருபுறம், சிதம்பரத்தின்மீது காங்கிரஸ் தலைமைக்கு இருக்கும் பாசமும் நேசமும் இளங்கோவன் மீது இல்லை. தோற்றாலும் ஜெயித்தாலும் சிதம்பரத்தைக் காப்பாற்றியே தீர்வதென்பதில் காங்கிரஸ் உறுதியாயிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொடர்ந்து பின்னிலையில் இருந்தபோது கூட, தோற்றாலும் அவர் அமைச்சராக்கப்படுவார் என்கிறதொனியில் அவசர அவசரமாக அறிவித்தது டெல்லி. இளங்கோவன் விஷயத்தில் அப்படி ஏதாவது அறிவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.


ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் வெண்ணெய் என்கிற இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையால் மனமுடைந்துபோனாரோ என்னவோ, பெட்ரோல் வெடிகுண்டிலிருந்து தன்னுடைய பலத்தைக் காட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார் ஈ.வி.கே.எஸ். இத்தனைக்கும், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற கட்சி இருக்கிறது என்பதை பரபரப்பாக வெளிப்படுத்தியவர் இளங்கோவன்தான்.


காங்கிரஸுக்கு எதிராக சிதம்பரம் தனிக்கொடி கட்டியபோதும், இளங்கோவன் காரில் காங்கிரஸ்கொடி தான் பறந்து கொண்டிருந்தது. 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பாரதீய ஜனதாவின் பிரச்சாரத்தை, தேர்தலில் நிற்பதற்கான உத்தரவாதம் கிடைத்தபிறகு எதிர்த்தவரில்லை அவர், தொடக்கத்திலிருந்தே எதிர்த்தார். இப்படி எல்லாவிதத்திலும் சிதம்பரத்துக்கும் அவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இருந்து என்ன பயன்? வாசலில் இவரைக் காக்கவைத்துவிட்டு, வீட்டுக்குள் சிதம்பரத்துக்கு விருந்து பரிமாறுகிறது காங்கிரஸ்.


வெல்லம் தின்கிறார் அவர், விரல் சூப்புகிறார் இவர். கொடுமைடா சாமி! சொந்தப் பொண்டாட்டியிடம் அடி உதை படுபவன் ரேடியோ பெட்டியில் சத்தத்தைக் கூட்டிவைப்பதைப் போல, சகட்டுமேனிக்கு சவுண்டு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் இளங்கோவன். ஒருசமயத்தில் பரபரப் அரசியல் நடத்தியபோது, அவர் வெறும் இளங்கோவன். இப்போதோ, முன்னாள் மத்திய அமைச்சர். இதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்திரா அம்மையார் காலத்தில்தான் எமர்ஜென்ஸி இருந்தது. இப்போது இது ஒரு ஜனநாயக நாடு என்றுதான் சொல்லப்படுகிறது. 'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதுபோல் இளங்கோவன் நடந்துகொள்ளக்கூடாது. பொது இடத்தில் பிரபாகரன் பேனர் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று இவராகவே ஒரு முடிவுக்கு வந்தாலும், அதை அகற்றுவதற்கும் கிழித்து எறிவதற்கும் இவரென்ன ஏட்டு ஏகாம்பரமா? சட்டவிரோதமென்றால் அதைப்பற்றிப் புகார் கொடுப்பதற்காகத்தான் காவல்நிலையங்கள் இருக்கின்றன.


பொழுதுபோக்கு கிளப்புகளிருந்து வெளியே வரும்போது மட்டுமே ஆவேச அறிக்கை விடும் ஒருசில தலைவர்களைப் போல், காவல்நிலையங்களில் உட்கார்ந்து கார்ட்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்களா போலீசார்? மத்திய அமைச்சர் பதவியிலிருந்த இளங்கோவனுக்கே இது தெரியாவிட்டால், மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? நீதிமன்ற வளாகத்திலேயே கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை வெட்டிக் கொல்பவனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? 'இளங்கோவன் ஒன்றும் விஷயம் தெரியாதவரல்ல, இப்படியெல்லாம் மனம்போனபோக்கில் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக்கொள்வது சட்டவிரோதம் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும், தெரிந்தேதான் இதைச் செய்கிறார், இதெல்லாம் டெல்லி எஜமானர்களுக்கு அவர் கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானம்' என்று ஒரு விமர்சனம் எழுகிறது.


அப்படியாவது தன்னை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கமாட்டார்களா என்று இவர் நினைக்கிறாரோ என்னவோ! ஒருவேளை அதெல்லாம் தனக்குத் தெரியாதென்றால் அதையாவது வெளிப்படையாக அவர் அறிவிக்கட்டும். இவ்வளவும் செய்துவிட்டு, இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதென்றால் அது காங்கிரஸால்தான் என்று இளங்கோவனாலும் சில காங்கிரஸ் தலைவர்களாலும் கூச்சமில்லாமல் சொல்லிக்கொள்ள முடிகிறது.


இந்தியாவை விடுங்கள், காங்கிரஸுக்குள்ளாவது ஜனநாயகம் இருக்கிறதா? இளங்கோவனைத் தூக்கியெறிவதாகட்டும், கிருஷ்ணசாமியைத் தூக்கியெறிவதாகட்டும், ஜனநாயக முறையிலா செய்கிறது காங்கிரஸ்? சொந்த மாநிலத்தில் குப்பைக்கூடையில் தூக்கியெறியப்படும் தலைவர்களையெல்லாம் கொண்டுவந்து ஆளுநர் பதவியில் அமர்த்தி அழகுபார்ப்பதையும், அவர்கள் காங்கிரஸின் 125வது ஆண்டை ராஜ்பவன் படுக்கையறையில் கொண்டாட அனுமதிப்பதையும் தவிர வேறென்ன செய்யமுடியும் காங்கிரஸால்!


இதையெல்லாம் தட்டிக்கேட்காமல், காரை பெயர்ந்து கொண்டிருக்கிற கட்டடத்துக்கு உள்ளே நின்றுகொண்டு, பக்கத்து வீட்டில் வெள்ளையடிக்கவில்லை என்று நொள்ளை சொல்லிக்கொண்டிருப்பது கருத்துத் தெளிவுடன் காங்கிரஸை விமர்சித்து மன உறுதியுடன் வெளியேவந்த பெரியாரின் பேரனுக்கு அழகா? ராஜீவின் படுகொலைக்காகக் கண்ணீர் சிந்த இளங்கோவனுக்கு உரிமை இருக்கிறது என்றால், இங்கிருந்து 26வது மைலில் ஆறே மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் ஒருலட்சம் தமிழ்ச் சொந்தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் உரிமை எங்களுக்குக் கிடையாதா?


1987ல் ஜெயவர்தனே என்கிற சிங்கள வெறியனுடன் ராஜீவ் செய்துகொண்ட வரலாற்றுப் பார்வையற்ற ஒப்பந்தத்தால் உயிரிழக்க நேர்ந்த வீரத்தமிழ் வேங்கைகளுக்காகவும் அப்பாவி மக்களுக்காகவும் சமாதானத்தின் பெயரால் கற்பழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகளுக்காகவும் கண்ணீர் சிந்தாமல் இருக்க தமிழன் என்ன மாமிசப் பிண்டமா, மரக்கட்டையா? காங்கிரஸ் தலைவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்!


எல்லாத் தமிழனும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? 1991 மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளோடும் பிரபாகரனோடும் காங்கிரஸுக்கு எந்த விரோதமும் இல்லை என்கிற புளுத்துப்போன பொய்யை மீண்டும் மீண்டும் அவர்கள் பரப்புகிறபோது, ஒரு மெய்யான விடுதலை இயக்கத்தின்மீது புழுதிவாரித் தூற்றுகிறபோது, ஆண்மையுடன் அதை மறுக்கிற கடமை எங்களுக்கு இருக்கிறது.


1987ல் ஒருமுறைக்கு மூன்றுமுறை அமைதியின் பெயரால் பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட மேதாவி யார் என்று கேட்கிற தகுதி எங்களுக்கு இருக்கிறது. இதுபோன்ற நேர்மையான கேள்விகளுக்குப் பதில்சொல்லத் தன்மானத் தலைவர் இளங்கோவன் தயாராயிருக்கிறாரா? தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் பிரபாகரன் பற்றிப் பேச பயந்ததாகவும், இப்போது பேச ஆரம்பித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் இளங்கோவன்.


இப்படியெல்லாம் அவர் சொல்வது, புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் பேசுபவர்களை உள்ளே தள்ளுங்கள் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் பிறப்பிக்கும் மறைமுக ஆணை மாதிரியே இருக்கிறது. அப்படி ஒரு கைது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால், புலிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்ப்புகார்களைச் சுமத்தி, உண்மைகளைச் சொல்லவேண்டிய அவசியத்தை எங்களுக்கு ஏற்படுத்திய சிதம்பரம், கருணாநிதியிலிருந்து இளங்கோவன் வரை அத்தனைப் பேர் மீதும் முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இப்படியொரு நியாயமான யோசனையைத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்வாரா இளங்கோவன்! பொய், முழுப்பொய், வடிகட்டிய பொய் என்று வாய்க்கு வக்கணையாகப் பேச இளங்கோவனையும் சிதம்பரத்தையும் கருணாநிதியையும் ஜனநாயகம் அனுமதிக்கும்.... அந்தப் பொய்யுரைகளைத் தகர்த்தெறிய ஊரறிய உண்மைகளை எடுத்துரைக்க மட்டும் வாய்ப்பூட்டு போட்டுவிடுமா?


அப்படியொரு வாய்ப்பூட்டு போட்டால் அதை உடைத்தெறியும் துணிவற்ற புழுக்களாக இருந்துவிடுவோம் என்றா இளங்கோவன் கருதுகிறார்? டெல்லி முதலாளிகளுக்கு இளங்கோவன் எவ்வளவு விசுவாசமாகவாவது இருந்துவிட்டுப் போகட்டும்... தங்கபாலுவையும் கிருஷ்ணசாமியையும் காட்டிலும் தீவிர விசுவாசி என்று அவர் காட்டிக்கொள்ளட்டும்.... அதற்காக நாட்டில் முசோலினியின் ஆட்சி நடப்பதாகவா அவர் நினைத்துக்கொள்வது! சிங்கள இனவெறியர்களால் பறிக்கப்பட்ட நிலத்தையும் உரிமையையும் மொழியையும் வாழ்வையும் மீட்பதற்காக, தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்காக, உயிரைக் கொடுத்துப் போராடியவர்கள் எங்கள் சொந்தங்கள்.


விடுதலைப் போருக்கும் தீவிரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு அவர்களைப் பற்றிப் பேசுகிற தகுதி அறவே கிடையாது. உலக வரலாற்றின் உன்னதமான பக்கங்களை வன்னிக்காட்டின் வெப்பக்காற்றில் எழுதிச் சென்றிருக்கும் அந்த மகத்தான மனிதர்களைப் பற்றி விமர்சிக்கவும், அவர்களைப் போற்றிப் பேசாதே என்று தடுக்கவும் கோபாலபுரத்தின் கொத்தடிமைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது? நாமார்க்கும் குடியல்லோம் என்பது தான் பச்சைத் தமிழன் காமராஜின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது.


அதைத்தான் நாங்கள் கடைப்பிடிக்க முயல்கிறோம். 'கிளிக்' என்கிற வார்த்தையை காந்திஜி பயன்படுத்தியவுடன், அதைத் திரும்பப்பெறும்படி துணிவுடன் வற்புறுத்தியவன் அந்த கருப்பு மனிதன். அந்த மனிதனின் படத்தையும் போட்டுக்கொண்டு, எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் டெல்லி தலைவர்களின் தயவில் கொன்று குவிக்கப்பட்டபோது வாயில் எதையோ வைத்துக்கொண்டிருந்துவிட்டு, இன்றைக்கு வாய்கிழியப்பேசுவோரின் கோழைத்தனத்தையா நாங்கள் கடைபிடிக்கமுடியும்!


காங்கிரஸ் தலைவர்களின் இந்த துணிவின்மையைத் தான் சந்தி சிரிக்கவைத்தார் எஸ்.வி.சேகர். அவருக்குத் தான் இந்த நேரத்தில் நன்றி கூறவேண்டியிருக்கிறது. காங்கிரஸ்காரர்களும் வாய்விட்டுச் சிரிக்கட்டும். அப்படியாவது அவர்களது கொத்தடிமை நோய் தீர்கிறதா என்று பார்ப்போம்.
- சங்கதிக்காக

- இயக்குநர் புகழேந்திதங்கராஜ்



2010/1/4 Ponraj Mathialagan

தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

திருமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். புலி, சிங்கம் படத்துக்கு நடுவில் திருமா படத்தை வைத்திருப்பார்கள். திருமா ஒரு துடிப்பான இளைஞர், அவரிடம் உள்ள இளைஞர்களை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தீவிரவாதிகளை ஒழிக்க முதல்வரால் முடியும். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் உங்களை (கலைஞர்) கெட்டவர்கள் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் படத்தை வைக்க தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது. கலைஞர் யாருக்காகவும் பயப்பட வேண்டாம்,. யோசிக்கவேண்டாம். எங்கள் தலைமை சொல்லும் வரைக்கும் எல்லா விஷயத்திலும் ஒத்துழைப்போம்.

அவர்களை சமாதானப்படுவதற்காக பிரபாகரன் படத்தை வைக்க அனுமதிக்காதீர்கள். தீவிரவாதிகள் வளருவது நாட்டுக்கு நல்லதல்ல. தீவிரவாதத்தை ஆதரிக்கும் வைகோ, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லுகிறார். சுபாஷ் சந்திரபோஸ் முடிவைப் போல இந்த விஷயத்தை கொண்டு போகிறார் வைகோ. அதோடு மக்களை ஏமாற்றுகிறார் வைகோ. பிரபாகரன் புகழை வைகோ ஏன் தமிழத்தில் பாடிக்கொண்டிருக்கிறார். பிரபாகரன் புகழை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


Posted in | 4 comments

தமிழ் நாட்டு மக்களே மீண்டும் நமக்கு ஒரு பெருமை ? நன்றி பகலவன்

தமிழ் நாட்டு மக்களே மீண்டும் நமக்கு ஒரு பெருமை ?என்னவென்று யோசிக்கிறிர்களா?ஆம் நாங்கதான் பெரிய ரவுடி என்ற பெருமை .வாய்க்கால் வரப்பு சண்டை, சொத்துத்தகராறு போன்றவற்றில் நடக்கும் படுகொலைகள் தவிர்க்கமுடியாதது எனக் கருத வாய்ப்புண்டு. ஆனால் சமிப காலமாக நடுரோட்டில் பட்டப்பகலில் ரவுடிகள் களமிறங்கி, கொலைக் குற்றங்களில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது இதை பற்றிய  நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பகலவன் குழுமத்தின் ஒரு அலசல் .

         பல
இளைஞர்கள் சினிமாவை பார்த்து தமது எதிர்காலத்துக்கு ரவுடி பாதையே சிறந்தது என முடிவு செய்கிறார்கள் தமிழகத்தின் இந்த நிலைக்கு தமிழ் சினிமாவும் மிக முக்கிய காரணம். இந்தி படத்திலோ ஆங்கிலப்படத்திலோ தமிழ் அளவிற்கு ரவுடிகளை மைய்யப்படுத்தி படங்கள் ஏடுப்பதில்லை . ரவுடியாயிருந்தால் மக்களிடத்தில் மரியாதை வரும் என்ற விஷத்தை தமிழ் சினிமா விதைக்கிறது.

                      தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டகாசம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடுவீதியில் பகல் நேரத்திலேயே ரவுடிக்கும்பல் நடத்திய கொலை சம்பவங்கள் கடந்த 10 நாட்களில் மட்டும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளன.கொடுமையின் உச்ச கட்டமாக நேற்று நெல்லை அருகே போலீஸ் எஸ்.ஐ ஒருவரே கொடூரமாக ரவுடிகளால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ரவுடிக்கும்பல் திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களை கொண்டு போலீஸ் அதிகாரியை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றுள்ளனர்.

ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை என்றால், சராசரி மனிதனின் பாதுகாப்புக்கு அங்கே என்ன உத்தரவாதம் இருக்கிறது என சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் முணுமுணுத்தனர்.

            கொலை சம்பவ இடத்தை சுடச்சுட மாநில அமைச்சர்களே பார்வையிட்டுள்ளனர். எந்த பின்னணியில், யாருடைய ஆதரவுடன் இத்தனை துணிச்சலாக பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளிலேயே களமிறங்கி படுகொலைகளை செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

           பலமான போலீஸ் படையையும், உளவு மற்றும் புலனாய்வுத் துறைகளையும் நிர்வகித்து வரும் தமிழக அரசுக்கு இந்த சமூகவிரோத கும்பலின் பின்னணியை கண்டறிந்து ரவுடிசத்தை வேரறுக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி சாதாரண பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

நேற்றைய தினம் போலீஸ் எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டதற்கு சற்று முன்பு புதன்கிழமை நாகர்கோவிலில் பெருவிளை மோகன் என்ற பிரபல ரவுடி இதே போல் நடுரோட்டில் கூட்டாளிகளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

கடந்த 1996ம் ஆண்டு நாகர்கோவில் சிறையில் புகுந்து ரவுடி லிங்கத்தை வெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவன் பெருவிளை மோகன். நடுவீதியில் ஏதோ சினிமா ஷூட்டிங் நடத்துவது போல சாதாரணமாக 'போட்டுத்தள்ளிவிட்டு' நழுவியது மற்றொரு ரவுடி கும்பல்.

        இந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் முன்பும் இதே போலவே சென்னை தரமணி அருகே 11 பேர் கொண்ட ரவுடிக்கும்பல், ஜெயபதி என்ற தங்களின் விரோதியை நடுரோட்டில் சுற்றி வளைத்து சராமரியாக வெட்டி சாய்த்தனர். அதே போல் கடந்த 28ம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூச்சிவிளாகத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரை ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்த போது, ரவுடிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். ஜெயக்குமார் உடலில் 35 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடிதுடித்து இறந்தார். பல்வேறு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய ஜெயக்குமார் போலீஸ் தேர்வு கூட எழுதியிருக்கிறார்.

                இதேபோல் டிசம்பர் 21ம் தேதி தண்டையார்பேட்டையில் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த முருகன் என்ற ரவுடியை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓடஓட விரட்டி வெட்டியது.ரத்தவெள்ளத்தில் முருகன் சாய்ந்ததும், ஆட்டோவில் கும்பல் தப்பியது. இதுவும் ரவுடிகளின் முன்விரோதத்தால் நடந்த கொலை என கூறப்பட்டது. இதற்கிடையே, மதுரையில் பிரபல ரவுடியை கொன்று, அவரது வீட்டுக்கு அருகே பிணத்தை புதைத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

                 இவ்வாறு தொடர்ச்சியாக ரவுடிகளின் படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பரவலாக அரங்கேறி வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் 6க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளன. சென்னையில் மட்டும் 350 புதிய ரவுடிகள் இந்த ஆண்டு களத்தில் இறங்கியருப்பதாக பேட்டி வேறு கொடுத்திருந்தார்கள் போலீசார்.போலீஸ் ஒரு ரவுடி என்பதால் தான் இந்தப்பிரச்சினை.

ரவுடிகள் தங்களுக்குள் அடித்து சாகட்டுமே என போலீஸ் 'சிறப்பு வியூகம்' அமைத்து வேடிக்கை பார்க்கிறதா அல்லது ரவுடிகள் உண்மையில் சுதந்திரமாக தங்களின் தாதா ராஜ்ஜியத்தை நடத்துகிறார்களா என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.

        திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் இது சாதாரணம் .கருணாநிதி பிறந்த நாளன்று சிறையிலிருந்து பத்து ரௌடிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.ஜெ அராஜக ஆட்சியில் தருமபுரி பேருந்தில் எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளை எரித்த ரவுடிகளை ஜெ. ஆட்சியில் காப்பாற்ற முயற்சித்த கதை ஊரே அறிந்த விஷயம்.இன்னும் நீதிக்காக அந்த பெற்றோர்கள் நிதிமன்ற வாசலில் காத்திருப்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

       
இன்றைய நிலையில் ரௌடிகளே  மத்திய அமைச்சர்களாகவும் மாநில அமைச்சர்களாகவும் இருக்கும் பொழுது இதுவும்  நடக்கும் , இதற்கு மேலும் நடக்கும்காவல்துறையினர் நினைத்தால் இதுபோன்ற நிகழ்வுகளை வேறோடு அறுக்க இயலும். ஆனால் இங்கே அவர்கள் ஆட்சியாளர்களின் ஏவல் நாயாகத்தானே இருக்கிறார்கள்.

 

 எப்போது காவல்துறை தனது பொறுப்பை உணர்ந்து, தாங்கள் அரசியல்வாதிகளின் அடிமை இல்லை, தங்களுக்கு சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து மக்களின் சுதந்திரத்தைக் காக்கும் கடமை உள்ளது என்ற எண்ணம் வருகிறதோ அப்போதே  நாட்டில் அமைதி நிலவும். எல்லாவற்றுக்கும் சிபாரிசு, லஞ்சம், ஊழல், அராஜகம், அத்துமீறல், அடக்குமுறை, அரிச்சுவடி கூடப் படிக்காத அரசியல்வாதிகளின் மிரட்டல். இப்படி இருக்க சாதரண பாமரன் இதை எதிர்த்து எப்படி போராட முடியும்.

 

  நிர்வாகத்திலும், அரசாங்கத்திலும் தனியார் துறையில் இருப்பதுபோல, பணிச் செயல்பாடு ஆய்வு முறையை செயல்படுத்தி, அதனை மிகக் கடுமையாகக் கண்காணிக்கணும்.தவறு செய்யும் அதிகாரிகளின் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பது, பணிநீக்கம் செய்வது என்று கடுமையான சட்டங்களை புகுத்தி ஒழுங்குபடுத்தலாம். நிர்வாகம் முழுவதும் சென்னையில் மட்டுமே குவித்திடாமல், பரவலாக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்கள் மட்டுமல்ல, அந்த அதிகாரத்தைச் சரிவரப் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் .அப்படி இல்லை என்றால்  உடனடியாக நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்.

             இந்த மாதிரியான கொலைகளுக்கு சினிமாவே காரணம். மந்திரிகள் முன்பு சப் இன்ஸ்பெக்டர் வெட்ட படுகிறார் என்றால் சினிமாவில் வரும் வன்முறையே காரணம். சமுதாயமும், சென்சர் போர்டும், மக்களும் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் நாளை நமக்கே நடக்கும்.


              மக்களே, நீங்கள் காசை வாங்கிகொண்டு வோட்டை போட்டீர்கள் இப்பொழுது அவர்கள் செலவு இல்லாமலேயே சினிமா கிளைமாக்ஸ் காட்டுகிறார்கள். இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இன்னும் நிறைய காட்டுவார்கள் அதை இலவச தொலை காட்சியில் பார்த்துகொண்டு அடிமையாக வாழ வேண்டியது தான் .




 
 

Posted in | 2 comments

ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு சித்ரவதைப்படுத்தியே பெரியவர் தலைவரின் தந்தை வேலுப்பிள்ளையை கொன்றிருக்கிறது!

"ரத்த உறவுகள் யாராவது கோரினால்... பிரபாகரனின் பெற்றோரை அனுப்பி வைக்கத் தயார்!'' என சமீபத்தில் அறிவித்தது சிங்கள அரசு. இதற்கான முயற்சிகளை உலகத் தமிழர்கள் பலரும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில்... திடீரென, ஜனவரி 7-ம் தேதி காலையில் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளை இறந்துவிட்டதாகச் சொல்லி, ஈழ ஆர்வலர்களின் இதயங்களில் இன்னுமொரு சோகத்தை விதைத்திருக்கிறது சிங்கள அரசு! 

ஈழப் போர் முடிவுக்கு வந்த கடந்த மே மாதம் 16-ம் தேதிவாக்கில் மக்களோடு மக்க ளாக சிங்கள முகாமுக்கு பிரபாகரனின் பெற் றோரான வேலுப்பிள்ளையும் பார்வதியும் வந்தார்கள். அங்கு புலிகள் கலந்திருக்கிறார்களா என ராணுவம் துருவியெடுத்தபோது, தாங்களே முன்வந்து, 'நாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர்' என அவர்கள் சரணடைந்தனர். அவர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்த சிங்கள அரசு, கொழும் பிலுள்ள அரசுக் கட்டடத்தின் 'நான்காம் மாடியில்' வைத்து விசாரணை நடத்தியது. அதன் பிறகு அவிசாவளை ஏரியாவில் இருக்கும் பனாகொடா முகாமில் அவர்களைத் தங்க வைத்ததாகவும், அப்போது உடல்நலமில்லாமல் வேலுப்பிள்ளை இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறது சிங்கள அரசு.

ஆனால், ''விசாரணை என்கிற பெயரில், ஈவு இரக்கமற்ற சிங்கள அரசு சித்ரவதைப்படுத்தியே பெரியவர் வேலுப்பிள்ளையை கொன்றிருக்கிறது!'' என ஆவேசமும் ஆதங்கமுமாகச் சொல்கிறார் வைகோ.

''புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் பெற்றோர் அங்கம் வகிக்கவில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனா லும் அவர்களைப் புலிகளின் பிரதிநிதிகள் போல கைது செய்து கொடூரம் காட்டியது சிங்கள அரசு. 86 வயது வேலுப்பிள்ளையை சிங்கள அரசு அணு அணுவாகச் சித்ரவதைப்படுத்தி வந்தது. வயதானாலும் அவருக்குப் பெரிதாக எந்த வியாதியும் இல்லை. போர் மரபும் மனசாட்சியும் இருந்திருந்தால் பிரபா கரனின் பெற்றோரை கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினியிடம் ஒப்படைத்திருக்கலாமே... இந்நிலையில், உலகமே வேடிக்கை பார்க்க... அந்தப் பெரியவரை கொன்று போட்டிருக்கிறார்கள். அவரைப் போலவே பால குமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சாலச் சிறந்த மூத்தவர்களையும் இனவெறியோடு சிங்கள அரசு சித்ரவதைப்படுத்தி வருகிறது!'' என வெடித்த வைகோ, வேலுப்பிள்ளை உடனான தனது நினைவுகளையும் ஈரமான கண்களோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''எங்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும், முசிறியிலிருந்து வந்து பிரபாகரனின் பெற்றோர் அதில் தவறாமல் கலந்து கொள்வார்கள். என் மூத்த மகள் ராஜலெட்சுமியின் மகனுக்கு பெயர் வைக்க வேலுப்பிள்ளையை அழைத்திருந்தோம். வாஞ் சையாகக் கொஞ்சியபடி 'பிரபாகரன்' என பெயர் சூட்டினார். மகனைப் பற்றிய பெருமிதம் அவரிடத்தில் எப்போதுமே இருக்கும். முசிறியில் அவர் தங்கியிருந்தபோது, அடிக்கடி பார்க்கச் செல்வேன். யாரிடமும் எப்போதும் 'உதவி' என்கிற வார்த்தையைக்கூட கேட்டுவிட மாட்டார். எப்போதும் அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார் பார்வதி அம்மாள்.
மகனைப் பார்க்காமல் எத்தனையோ வருடங்கள் பிரிந்திருந்தாலும் நாங்கள் பார்க்கும் போதெல்லாம், 'பிரபாகரனை எங்களுக்கு சொந்தமான பிள்ளைன்னு மட்டும் நினைக்க முடியாது. பிரபாகரனை நம்பி ஒரு நாடே இருக் குப்பா...' என பெருமிதத்துடன் சொல்வார் வேலுப்பிள்ளை. முசிறியில் தங்கியிருந்த அந்தத் தம்பதிக்கு இலங்கையில் போர் ஆரம்பித்தவுடன் இருப்புக் கொள்ளவில்லை. 'அங்கே எங்க புள்ளையை நம்பி எல்லோரும் இருக்கையில்... நாங்கள் இங்கு இருப்பது முறையில்லை' எனச் சொல்லித்தான் ஈழத்துக்குக் கிளம்பிப் போனார்கள். போரின் தீவிரம் கடுமையானபோதுகூட தன் பெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ பிரபாகரன் எவ்விதத் தனித்துவ வசதிகளையும் செய்யவில்லை. ஈழத்தில் இருந்த எல்லோரையும் போலவேதான் அவர்களையும் நினைத்தார். வேலுப்பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தப்ப வைக்க நினைத்திருந்தால், சுலபமாக அவர் அதை நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அதைச் செய்ய பிரபாகரன் விரும்பவில்லை. வேலுப்பிள்ளைக்கும் அப்படி தப்பிச் செல்வதில் விருப்பம் இல்லை. அதனால்தான் உக்கிரமான போரிலும் அவர்கள் மக்களோடு மக்களாகவே இருந்தார்கள். ஒரு போதும் கணவரைப் பிரியாத பார்வதி அம்மாள் சிங்கள ராணுவம் கைது செய்யும் நிலையிலும் கணவரின் கையைப் பிடித்தபடியேதான் நின்றிருக்கிறார். அந்த ஜீவன் எப்படியெல்லாம் துடிதுடிக்கப் போகிறதோ?'' என்றபோதே வைகோவுக்கு குரல் உடைந்து போனது.

வேலுப்பிள்ளையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசிடம் அனுமதி கேட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான திருமாவளவனிடம் பேசினோம். ''பிரபாகரனின் பெற்றோரை இலங்கையிலிருந்து மீட்பதற்காக பசில் ராஜபக்ஷேயிடம் தொடர்ந்து பேசி வந்தேன். பிரபாகரனின் சகோதரியான விநோதினி மூலமாக கனடாவில் உள்ள இலங்கை தூதரகத்திடமும் கோரிக்கைக் கடிதம் கொடுக்க வைத்தேன். அதற்கு இலங்கை தூதரகம் எவ்வித பதிலையும் சொல்லவில்லை. கடந்த இரண்டாம் தேதி கொழும்பு போயிருந்தபோது, பசில் ராஜபக்ஷேவிடம் மீண்டும் பேசினேன். 'பிரபாகரனின் பெற்றோரை இந்தியா தவிர்த்து வேறெந்த நாட்டுக்கும் அனுப்ப மாட்டோம்' என ஆரம்பத்தில் ரொம்பவே பிடிவாதம் காட்டிய பசில், ஒரு கட்டத்தில் கனடாவுக்கு அனுப்பவும் ஒப்புக் கொண்டார். அவர்களுக்குத் தேவையான விசாவையும் எடுக்கச் சொன்னார். சில முக்கிய நபர்களின் மூலமாக அதற்கான முயற்சிகளிலும் இறங்கினோம். இந்த நிலையில்தான் திடீரென வேலுப்பிள்ளை இறந்துவிட்டதாகச் சொல்லி இடியை இறக்கி இருக்கிறது சிங்கள அரசு. இத்தனை முயற்சிகளை எடுத்தும் ஒரு மாவீரனின் தந்தையைக் காப்பாற்ற முடியவில்லையே என்பதை நினைக்கிறபோதே நெஞ்சு வெடிக்கிறது!'' என்றவர்... கொஞ்சம் இடைவெளிவிட்டு,

''வேலுப் பிள்ளையை ஓர் அநாதைப் பிணம் போல புதைத்துவிடக் கூடாது என சிங்கள அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அவருடைய உடலையாவது சிங்கள அரசு, தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் மிகுந்த மரியாதையோடு அவருடைய இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறேன். இதற்கிடையில் பிரபாகரனின் தாயாரையும், மாமியாரையும் இப்போதாவது இலங்கையிலிருந்து அனுப்ப சிங்கள அரசு மனசு வைக்க வேண்டும்!'' என்றார் இறுக்கமான முகத்தோடு.

இதற்கிடையில் கனடாவில் இருக்கும் பிரபாகரனின் சகோதரி வினோதினியும் தன் தந்தையின் உடலை தமிழ் எம்.பி.யான சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கும்படி இலங்கை தூதரகத்திடம் கோரியிருக்கிறாராம். சிவாஜிலிங்கமோ, ''நேர்மையான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டால்தான் வேலுப்பிள்ளையின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது உலகுக்குத் தெரியும். வேலுப்பிள்ளையின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்ய சிங்கள அரசு அனுமதிக்க வேண்டும்!'' எனச் சொல்லி இருக்கிறார்.

''நான் இறந்துபோனால் வல்வெட்டித் துறையில் உள்ள சோனப்பு சுடலையில்தான் என்னை எரியூட்ட வேண்டும்!" என்று ஒரு கடிதமாகவே எழுதி வைத்திருந்தார் பிரபாகரனின் தந்தை. இது ஒரு புறமிருக்க, ''வேலுப்பிள்ளை எனக்குத் தந்தை போலத்தான். சிறுவயது தொட்டே அவரது அன்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. அவருடைய இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ள அனுமதியுங்கள்!" என்று இலங்கை அரசிடம் 'பர்மிஷன்' கேட்டாராம் பிரபாகரனின் கோபத்துக்கு ஆளான கருணா!

பிரபாகரனின் தந்தை இந்தியாவுக்கு வந்திருந்தால், 'இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த உண்மைகள் வெளிவந்திருக்குமே' என்ற ஆதங்கம் தமிழுணர்வாளர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

-இரா.சரவணன்
=========

நன்றி: ஜூனியர் விகடன்

Posted in | 0 comments
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails