இலங்கையில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் எனக்கூறிக் கொண்டு சிங்களர்களின் பயங்கரவாதத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கும் இந்தியரசு வாழ்க! வாழ்க! வாழ்க!

இந்திராவின் மறைவிற்கு பின்னர் கடந்த பல ஆண்டுகளாக ராஜீவ் எடுத்த முயற்சியும், அதன் பின் வந்த அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு உலகிலேயே திறமைவாய்ந்த அனைத்து படைகளையும் (தரைப்படை, கப்பற்படை, விமானப்படை) வைத்திருந்து திறமையான நிர்வாகம் நடத்திக்கொண்டிருந்த LTTE யை ராஜபட்சேவின் துணையோடு இந்தியரசு கொன்றழித்தது. அந்தப்போரில் பல்லாயிரக்கனக்கான அப்பாவிபொதுமக்கள் கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்களே, குறிப்பாக சிங்களப் பொதுகுடிமக்கள் ஒருவர் கூட இந்தப்போரில் சாகடிக்கப்படவில்லை. தமிழர்கள் வாழ்ந்த பகுதி தமிழர்களின் தாயாகப் பகுதி என்பதனை நடந்து முடிந்த ஈழம் நான்காம் போர் இந்த உலகத்திற்கே நிருப்பித்துள்ளது. இலங்கையரசு அந்நாட்டுப்பூர்விககுடிகளான தமிழர்களை இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்திக் கொண்டிருக்கிறதென்பது அந்த நாட்டின் அரசியல் சட்டமே சான்று.

முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவர்களுடைய சொந்த மண்ணுக்கு அனுப்பாமல், முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து சாகடிக்கும் போக்கு ராஜபட்சே வின் இனவெறி ஆளுமையை உலகுக்கு பறைச்சாற்றி கொண்டிருக்கிறது. ஒரு சிங்கள குடும்பம் கூட இந்தவதை முகாம்களில் இருத்ததாக யாரும் கேள்விப்பட்டதில்லை, தமிழர்களின் நிலைமை இப்படியிருக்கும் நேரத்தில் இலங்கையரசாங்கம் சிங்களர்களை வேக வேகமாக தமிழர் பகுதிகளில் குடியேற்றம் செய்து கொண்டிருக்கிறது, அதுவும் இராணுவக்குடியமைப்புகளை தமிழர்கள் வாழ்ந்தபகுதிகளில் திட்டமிட்டு குடியேற்றம் செய்து கொண்டுவருதின் நோக்கத்தை நாம் சற்று உன்னிப்பாக கவனிக்கவேண்டியுள்ளது.
LTTE யை வீழ்த்துவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அனைத்து சர்வதேச நாடுகளும் அறிந்த ஒன்றாகும். LTTE யை வீழ்துவதில் இந்தியாவின் பங்கு பெரியதென்றாலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் என்று சொல்லிகொள்பவர்களின் பங்கு மிகப்பெரியது. ஏதோ ராஜிவின் படுகொலைதான் இத்தாலி நாட்டுக்காரர் ஆன சோனியாவை கோபமுட்டியது என்பது தவறான பார்வை.

உண்மையில் ராஜிவை கொன்றது யார்??? நாம் LTTE என்று சொல்வதுதான் முலமாக மிக எளிதாக நாம் இந்த கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாலாமென்று கருதுகின்றேன். ஏனெனில் உண்மையை கண்டுபிடிப்பதின் உண்மையாகவே யாருக்கும் அக்கறை இல்லை என்பதனை நாம் பல படுகொலைச்சம்பவத்தை உதாரணமாக கொல்லலாம். ( ஜாலியன் வாலாபாக் படுகொலை, சீக்கியர்கள் படுகொலை, கென்னடி படுகொலை, இந்திரா படுகொலை, காந்தி படுகொலை, கோத்ரா படுகொலை…) ராஜிவ் கொல்லப்பட்ட காலகட்டம் அவருக்கு அரசியலில் செல்வாக்கு மிகவும் குறைந்திருந்தது பல காரணங்களால் ( போபர்ஸ், இட ஒதுக்கீடு, ஈழப்பிரச்சனை, உள்கட்சி மோதல், அமெரிக்க எதிர்ப்பு…) முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கு முதல் எதிரியாக இருந்தார். ராஜிவ் ஆட்சி புரிந்த காலத்தில் coke, PEPSI போன்ற எந்த சிறு அமெரிக்க பொருட்களும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை. மேலும் அவர் தனது காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டிருந்த தன் தாயாருக்கு விசுவாசியான முத்தகாங்கிரஸ் உறுப்பினர்களை முற்றிலும் ஒரங்கட்டி வைத்திருந்தார். அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ராஜிவை கொன்ற தானு கட்டியிருந்த வெடிகுண்டு கூட அமெரிக்க தயாரிப்பு என்பது நிருபணமாகியுள்ளது. மேலும் ராஜிவால் ஒதுக்கப்பட்ட அந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியாவால் முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் பொருள் என்ன என்பதனை நாம் இந்த இடத்தில் சிந்திக்க தோன்றுகிறது. ஆக ராஜிவ் படுகொலையால் சோனியாவுக்கு சாதகமானதே தவிர பாதகம் இல்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசால் டில்லியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பிரபாகரன் வரும் எதிர்காலத்தில் இந்தியரசுக்கு எதிராக நாங்கள ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகும் என தெளிவாக எடுத்துரைத்தார். பின்பு இலங்கை திரும்பிய பிரபாகரன் யாழ்ப்பாணம் சுடுமலையில் பொதுமக்கள் முன்பு உறையாற்றும் பொழுது இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் என்ற அறைகூவல் விடுத்துதான் தங்களுடைய ஆயுதங்களை அமைதிப்படையிடம் ஒப்படைத்தனர். 1986 களில் அப்படி துல்லியமாக சிந்திக்க தெரிந்த பிரபாகரன் நிச்சயம் ராஜிவ் படுகொலையை செய்திருக்க முடியாது என்பது திண்ணம். அப்படி சதாரனமாக சிந்திக்க கூடியவர் இல்லை பிரபாகரன் என இந்திய அமைதிப்படையே ஒப்புகொண்டுள்ளது. அப்படி ராஜிவ் படுகொலையை நிகழ்த்தியிருந்தால் அதனால் வரும் எதிர்விளைவுகளை பிரபாகரன் அறியாதவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பொழுது LTTE யினர் அவர்களுது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு 3 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். ராஜிவ்படுகொலையை அவர்கள் செய்யதிருந்தால் நியாப்படி அவர்கள் நிறையபழிவாங்கும் படலத்தை தொடர்ந்திருக்கமுடியும் ( வரதராஜபெருமாள், சந்திரஹாசன், டக்ளஸ்தேவனாந்தா…) அப்படிசெய்யக்கூடிய எந்தமுயற்சியிலும் LTTE யினர் ஈடுபட்டதாக தெரியவில்லை.

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் கூட கருணா,ராஜபட்சே, கோத்தபாயே, பொன்சேகா, கருணாநிதி, ஜெயலலிதா, திருமா, சுபவி, வீரமணி, ஜெகத்கஸ்பர், கனிமொழி, சிதம்பரம், சிவசங்கரமேனன், எம்.கே.நாராயணன், பிரணாப்முகர்ஜி, விஜய்நம்பியார், பாங்கிமுன், சோனியா, மன்மோகன் மற்றும் சிலர் கொல்லப்பட்டால், அந்த பழி LTTE யின் மீது விழுமென்பது அனைவரும் அறிந்த உண்மை. LTTE யை வேரொடு அழித்துவிட்டோம் என்று கொக்கறித்து கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளும் LTTE யினர் தான் படுகொலைக்கு காரணமென்று வரிந்து கட்டி கொண்டு வரிசையில் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, எப்படி சிதம்பரம் LTTE யினர்தான் மாவோஸ்டுகளுக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்று எந்தவித ஆதரமும் இல்லாமல் குற்றம்சாற்றுகிறாரோ, அதே வேலையைதான் பாகிஸ்தானும் இலங்கை கிரிக்கட் வீரர்களை தாக்கியது LTTE யினர் தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது, இன்னும் வரும் நாட்களில் பாகிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளை நடத்துவது LTTE யினர்தான் என்று சொன்னாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.

இலங்கையில் LTTE யை அழிக்க இந்தியரசு ஏன் மாபெரும் முயற்சியினை செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு நாம் விடை தெரியாமல் இருக்கின்றோம். இந்தியாவின் கடைகொடியில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்தியரசு வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். பூகோளப்படி பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு நெருங்கிய உறவும் உரிமையும் இருக்கிறது. ஆனால் இந்தியரசும் சரி, இந்தியர்களும் சரி பாகிஸ்தானை மிகப்பெரிய எதிரியாகவே கருதி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகள் இந்தியரசு மேற்கொண்டுவருகிறது. உலகில் எங்கெல்லாம் உள் நாட்டு பிரச்சனைகள் எழுகிறதோ அங்கெல்லாம் இந்தியரசு நேரிடையாக தலையிடும் என்பதனை நாம் பல இடங்களில் பார்த்துள்ளோம். (பங்களாதேஷ், இலங்கை, காஷ்மீர், திபெத், காங்கோ). இங்கெல்லாம் அமைதியை நிலைநாட்டசென்ற இந்திய ராணுவம் செய்த அட்டுழியங்களையும் நாம் நன் கு அறிவோம். அத்தகைய செயலுக்கு இந்தியா ஒரு பொழுதும் வருத்தம் தெரிவித்ததில்லை. ஏன் ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்த தவறுகளுக்கு கூட ராஜிவ் நியாம் கற்பித்தார், இராணுவம் அப்படி நடந்து கொள்வது இயல்பானது என பதிவுசெய்துள்ளார்.

ஏன் பர்மாவில் நிண்ட நாட்களாக வீட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ள சன் சாங் சுகி அவர்களை விடுதலை செய்யக் கோரி இந்தியரசு இதுவரை எந்த வலுவான நடவடிக்கையும் எடுக்கவில்லையே? ஆனால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கங்கோவிற்கு அமைதிப்படையை அனுப்பி அங்குள்ள பழங்குடியினர் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய கற்பழிப்புகளை உலக நாடுகள் துணையோடு இந்திய அரசு முடி மறைத்துவிட்டது.
பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடு வெள்ளையனை வெளியேற்ற இருவரும் இணைந்தே போரட்டம் நடத்தி இருக்கின்றோம். இந்திராவின் கணவர் கூட பார்ஸி முஸ்ஸிம் தான், இன்றும் பாகிஸ்தானியர்களுக்கு டில்லியில் மற்றும் இந்தியாவின் வட பகுதிகளில் அவர்களின் மூலாதாரங்கள் உள்ளன. அதே போல இந்தியர்களுக்கும் பாகிஸ்தானில் தங்களுடைய வாழ்வின் அடையாளங்கள் உள்ளன. இன்றும் பல விதங்களில் பாகிஸ்தானியர்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உணவு, உடை, இசை இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

பூகோளபபடியும் பாகிஸ்தானையும், இந்தியாவையும் எந்த கடலும் பிரிக்கவில்லையே! ஆனால் இன்றோ இந்தியர்கள் பாகிஸ்தானியர்களிடம் பகைமை வளர்த்துக்கொண்டுள்ளோம். தினம் தினம் அங்கு செத்து கொண்டிருப்பது நம் சகோதர இனம் தான் என்ற உணர்வு ஏன் ஒவ்வொரு இந்தியனுக்கும் வரவில்லை. ஆனால் ஈழத்தில் சிங்கள இனத்திற்கு ஏதாவது நடந்தால் மட்டும் இந்தியா இலங்கை அழைக்காமலே உதவி செய்கிறது ஏதானால்?
இராமாயண மகாபாரததில் கூட ஆரியர்களின் எதிரியாகவே திராவிடர்களை(தமிழர்களை) சித்தரித்துள்ளனர். எந்த ஒரு இடத்திலும் இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்தது இல்லையே ! ஆனால் இன்று பாகிஸ்தானியர்கள் இந்து மதத்தின் எதிரிகள், தமிழர்கள் இந்தியாவின் எதிரிகள் என்று குறிப்பாக கிரிக்கட் என்னும் விளையாட்டின் மூலமாக சிறு வயது முதலே கற்பிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராமாயனமும், மகாபாரதமும் திராவிடர் இனத்துக்கு எதிராகவே படைக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் நன் கு உணரவேண்டும்.

இங்கு தான் நமக்கு பெரிய கேள்வி எழுகிறது, திராவிடர்கள்(தமிழர்கள்) தான் ஆரியத்தின் முதல் எதிரிகள் அப்படி இருக்க இந்தியா ஏன் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இஸ்லாமியார்களுக்கு எதிராகவும் செயல் பட்டுகொண்டிருக்கிறது. ஏனென்றால் திராவிடர்களுக்கு(தமிழர்களுக்கு) எப்படி தனி பண்பாடு கலாச்சாரம் இருக்கிறதோ அதே போல் இஸ்லாமியர்களுக்கும் இருக்கிறது. ஆனால் ஆரியர்களுக்கு அப்படி ஒரு செம்மையான பண்பாடோ கலாச்சாரமோ கிடையாது. ஆகையாலே இந்தியாவில் சிறுபான்மையாக இருக்க கூடிய ஆரிய இனம் இன்று மற்ற பெரும்பான்மை இனங்களை அழித்தோழிக்கும் முயற்சியில் செயல் பட்டுகொண்டுவருகிறது.

உலகத்திலே சிறுபான்மை இனமான சிங்களவர்களுக்கு இந்தியா பெருதவியை செய்து கொண்டிருக்கும் காரணம் என்ன என்பதனை நாம் ஆராய வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இனமே ஆரிய இனமே இன்று சிங்களவர்கள் என்று வேறு வடிவம் பெற்றுள்ளது. சிங்கள இனமான ஆரியத்தின் கிளையை காப்பற்றவே இந்தியரசு திராவிடர்கள்(தமிழர்கள்) நடத்திகொண்டிருக்கும் விடுதலை போராட்டத்தை நசுக்கி கொண்டிருக்கிறது. சோனியாவின் கைக்கூளி மன்மோகன் அவர்கள் ஈழ்ப்பிரச்சனைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதனை நாடளுமன்றத்தில் பதிவுசெய்திருப்பது நகைச்சுவைக்கானதாக இருக்கிறது.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்க இந்தியா மட்டும் காரணம் அல்ல தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு இந்தியாவுக்கு பெருதவியாக இருந்தது. ஈழத்தில் சிறப்பாக ஆட்சி நடத்திகாட்டிய LTTE யினர்களுக்கு தமிழர்கள் மத்தியில் நல்ல புகழ் கிடைத்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் இனதிற்கே பிராபாகரன் தான் தலைவர் என்பது உலகதமிழர்கள் அனைவாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. குள்ளநரிக்குதான் ராஜதந்திரத்துடன் செயல்படும் என்பார்கள், அதே குள்ளநரித்தனத்துடன் செயல்பட்டு சிறந்த இந்தியதேசியவாதியாக மாறியுள்ளார் கருணாநிதி. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலகளில் கருணாநிதியால் நடந்த பட்டுகொண்டிருக்கும் தொழில்களை அவர் இழக்க விரும்பவில்லை. ஆகையால் தான் இந்து ராமின் மாப்பிள்ளையான கலாநிதிமாறானால் இந்தியாவிலே அதிக சம்பளம் பெரும் நபராக உருவாக முடிந்தது.

இந்தியரசு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் விடுதலை போரட்டத்தை நசுக்க கருணாநிதி எப்படி பெரிய கருவியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறரோ, அதே போல காஷ்மிரில் நடந்து கொண்டிருக்கும் விடுதலை போராட்டத்தை கருணாநிதியை கொண்டு ஒடுக்க சில ஆலோசனைகள் மற்றும் வினாக்களை தங்கள் பார்வைக்கு விட்டுள்ளேன்.

1. கருணாநிதியை காஷ்மிரின் முதல்வராக்குவது.
2. காஷ்மிரில் சொத்து வாங்கும் உரிமையை உடனே அவருக்கு வழங்கவேண்டும்.
3. காஷ்மிரில் அவரின் குடும்ப தொழிலை உடனே தொடங்க உரிமை வழங்கவேண்டும்.இப்படி சில உரிமைகள் அவருக்கு வழங்கினால் கருணாநிதி மெல்ல மெல்ல காஷ்மிர் மக்களின் சிந்தனையை அவர் நிச்சயம் சீர்குலைத்துவிடுவார், அதன் பின்பு அவர்களுக்கு போராவேண்டும் என்ற எண்ணமே தோன்றாது.
4.அப்படி இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களை கருணாநிதி ஒடுக்கினால் இந்தியாவிற்கு கருணா தேசம் என்ற பெயர் சூட்ட வேண்டும். (தமிழ்நாட்டில் 50% இடம் கருணாநிதியிடம் தான் உள்ளது)
5.LTTE யினர் பயங்கரவாதிகள் என்றால் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, அலெக்சாண்டர்…. இவர்களையும் இந்தியரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

இந்திய அரசின் எதிரிகள் யார் ? பாகிஸ்தானியர்களா, சீனர்களா, திராவிடத்தமிழர்களா என்பதனை உங்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். சீனாவுக்கு இந்தியா மீது என்றுமே போர்தொடுக்கும் எண்ணம் துள்ளியும் இருந்ததில்லை இனி இருக்கபோவதுமில்லை. நேரு காலத்தில் நடந்த இந்தியா சீனா போர் கூட நேருவால் தொடுக்கப்பட்டதே தவிர சீனாவால் அல்ல, அப்படி நேருவால் ஆரம்பிக்கப்பட்ட போரை சீனாதான் முதலில் நிறுத்தியது. சீனா இந்தியாவை ஒரு அடிமை நாடாக தான் பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவால் சீன பன்றியின் மயிரை கூட புடுங்கமுடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. ஆகையால் தான் சீனா வேக வேகமாக இமாலாய எல்லைபகுதியில் 27 போர்விமானத்தலங்களை நிறுவியிருக்கிறது. இந்தியர்கள் குறிப்பாக திராவிடர்கள்(தமிழர்கள்) காலம்காலமாக அடிமையாகத்தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் மன்னர்களுக்கும் அதன் பின் வெள்ளைக்காரர்களுக்கும், தற்பொழுது காங்கிரஸ் என்னும் பார்ப்பன பனியாக்களுக்கு அடிமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தின் பேராதரவு கட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி, இந்து மதத்தின் பிரதிநிதிபோல தோற்றத்தை உருவாக்கி கொண்டு பாகிஸ்தானையும், இஸ்லாமியர்களையும் கடுமையாக எதிர்த்துக்கொண்டு சீனாவுக்கு பேராதரவு கொண்டுவருகிறது.

இதே நிலைப்பாட்டைத்தான் சிவப்புசட்டைப் பார்ப்பனர்களும்(இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள்) கொண்டுள்ளார்கள். அப்படியானால் யார் தான் நம்முடைய உண்மையான விடுதலைக்கும் உரிமைக்கும் போராடக்கூடியவர்கள்.

உலகில் அநியாயம்
நடக்கும் ஒவ்வொரு
தருணமும்
அடக்க முடியாத
ஆத்திரத்தினால்
உங்களால்
குமுறி கொந்தளிக்க முடிந்தால்
நாம் தோழர்களே – சேகுவேரா

நம் கண் முன் நம் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை அழிவதைப்பார்த்துக் கொண்டிருப்பவன், வரும் காலத்தில் அவனுடைய தாயியை வேறோருவன் அவன் கண்ணெதிரே கற்பழித்தாலும் நிச்சயம் அவன் வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதான் இருப்பான்.

தோழர்களே பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டுகொண்டிருப்பதுபோல் நடமாடிக்கொண்டு தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஈழத்தில் நாசவேலைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்தியாவின் கொரமுகங்களை வெளிக்கொண்டுவர முயற்ச்சிப்போம்.


Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails