அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
Posted On Wednesday, 30 December 2009 at at 04:56 by Mike| அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய் |
| அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய் |
| அண்ணனைத் |
| தம்பியை |
| அக்காளைத் தங்கையை |
| மாமனை மச்சானை |
| மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை |
| குருவை |
| அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை |
| இன்பிறவெல்லாம் கொன்றாய் |
| தேசத்தின் விடுதலையின் பெயரால்." |
| "எச்சங்களில் |
| "எந்த எலும்பு" உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்! |
| இவையெல்லாம் |
| எதன் பெயரால், |
| எதன் பெயரால், |
| எதன் பெயராலெனப் பிதற்றுவாய். |
| அன்று, |
| உன் பிதற்றலுக்குச் |
| செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ |
| இல்லாதிருக்கக் காண்பாய்!" |
--
தோழமையுடன்......
Muthuraja.I
