இனவெறியன்கள் 18 பேர் பலி; 40 பேர் காயம்
Posted On Saturday 10 January 2009 at at 15:08 by Mikeகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 18-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்பு தாக்குதலை நடத்தினர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் நடைபெற்றது.
இம்முறியடிப்பின் போது சிறிலங்கா படைத்தரப்பில் 18-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மோதல் நடைபெற்ற களமுனை எங்கும் சிறிலங்கா படையினரின் படையப் பொருட்களும் உடலங்களும் சிதறிக்கிடக்கின்றன.
பிகேஎல்எம்ஜி - 01
ரி-56-2 ரக துப்பாக்கி - 02
ஆர்பிஜி எறிகணைகள் - 06
ஆகிய படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
நன்றி புதினம்