மகிந்த கொடூரம், இன்று தமிழ் மக்கள் 12 பேர் படுகொலை - 73 பேர் படுகாயம், ஜெ-தெரிகிறதா?

விசுவமடு - தேராவில் - தேவிபுரம் - உடையார்கட்டு - சுதந்திரபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் மக்கள் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


விசுவமடு தேராவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப்படையினர் நடத்திய எறிகணைவீச்சில் 04 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறில் இயங்கும் மல்லாவி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ் எறிகணைத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது வீட்டின்மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் 13 அகவை த.தயாகரன், 43 அகவை த.தவநேசன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


இதேவேளை இன்று அதிகாலை 02.00மணியளவில் உடையார்கட்டு குரவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைகள் வீழ்ந்துவெடித்ததில் 05பேர் படுகாயமடைந்துள்ளனர்.
42 அகவை சிவராஐ
27 அகவை பிரபாகரன்
18 அகவை மதியரசன்
18 அகவை ரவீந்திரன்
47 அகவை கி.தங்கம்மா


ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்றுகாலை 6.00 மணியளவில் விசுவமடு இளங்கோபுரத்தில் எறிகணைகள் வீழ்ந்துவெடித்ததில் இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.16 அகவை கோமதி என்பவரே படுகாயமடைந்துள்ளார்.


சிறிலங்காப்படையினர் இன்று பிற்பகல் 2.00 மணிவரை முல்லைத்தீவு தேவிபுரம், சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள்மீது தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணைத்தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வள்ளிபுனத்தில் இயங்கும் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று பிற்;பகல் 12.30 மணிக்கு சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள்மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 53 அகவை கனகரத்தினம்-பாலசுந்தரம் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் துணைவியாரான 53 அகவை பாலசுந்தரம்-மகாலட்சுமி படுகாயமடைந்துள்ளார்.


இதேவேளை தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது பி.ப 1.30 மணிக்கு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
29 அகவை ந.பிரபாகரன்
27 அகவை ராஜீவ்குமார் - துஸ்யந்தினி
19 அகவை மரியாம்பிள்ளை-விஜீதா
16 அகவை சபாரட்ணம்-சிவமாலினி
17 அகவை மரியாம்பிள்ளை-ஜீவிதா
48 அகவை கறுப்பையா-சுப்பிரமணியம்
18 அகவை ஜீ-அருள்மதி


ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


தேவிபுரம் பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் பல்குழல் வெடிகணைத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று முற்பகல் 10மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் தேவிபுரம் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இன்று நண்பகல் மற்றும் பிற்பகல் வேளையில் தேவிபுரம் புதுக்குடியிருப்பு-மூங்கிலாறு குரவில் உடையார்கட்டு இடம்பெயர்ந்தோர் மக்கள் குடியிருப்புக்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் தேவிபுரத்தில் 60 அகவை சந்திரசேகரம் சிவமணி என்பவர் படுகாயமடைந்தார். இவர் கேப்பாபுலவிலிருந்து இடம்பெயர்ந்தவராவார்.


நேற்று ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதல்களில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.68 பேர் படுகாயமடைந்தனர். இன்று பிற்பகல் தேராவில்-குரவில்-சுதந்திரபுரம் பகுதிகளில் ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் 31 பேர் காயமடைந்துள்ளனர்.
24 அகவை செல்வரூபி
28 அகவை சத்தியவதனி
24 அகவை மே.இராகவன்
30 அகவை செல்லம்மா
30 அகவை முத்துலட்சுமி
27 அகவை லீன் றெஜினா
29 அகவை அனுசாந்தினி
42 அகவை சிவராசா
48 அகவை இந்திராணி
26 அகவை மயூரன்
29 அகவை லோ.அஜந்தா
28 அகவை சுஜிகரன்
47 அகவை ரவீந்திரன்
30 அகவை தமிழ்த்தேவி
21 அகவை நந்தா
20 அகவை இளமதி
23 அகவை ரோகினிமலர்
28 அகவை ஜெகன்
22 அகவை லக்ஸ்ராஜா
19 அகவை குகநாதன்
17 அகவை கேசவன்
23 அகவை இளநாதன்
29 அகவை சத்தியன்
23 அகவை ராஜ்குமார்
17 அகவை காண்டீபன்
19 அகவை தி.கிருஸ்ணா
09 அகவை மைந்தகன்
38 அகவை விமலநாதன்
25 அகவை தேன்மதி
27 அகவை சந்தனக்குயில்


ஆகியோர் படுகாயமடைந்தனர். விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் இரண்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 02 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று பி.ப 3.00 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதில்
45 அகவையுடைய காரைநகரைச் சேர்ந்த செல்வரத்தினம்
35 அகவையுடைய சற்குணராஜா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.


இதேவேளை செல்வரத்தினம் - ரதிமலர் அ.செல்வி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


உடையார்கட்டு குரவயல் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 06 பேர் காயமடைந்துள்ளனர். இன்று பி.ப 01.00 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதில்
15 அகவையுடைய வி.கஜந்தன்
18அகவையுடைய அ.வரதராசா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.


இதேவேளை
25 அகவையுடைய அருட்செல்வன்
22 அகவையுடைய தவராசா
42 அகவையுடைய உதயகுமார்
36 அகவையுடைய கருணா
43 அகவையுடைய சுப்ரமணியம்
36 அகவையுடைய சிவதாஸ்
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


விசுவமடு மயில்வாகனபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 1மணிக்கு ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் சிறுவர் உட்பட மக்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் பெண்களாவர். இவர்களில் ஒருவர் 15 அகவை விஜிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மற்றையவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.
72 அகவை முனியம்மா
41 அகவை சுப்பிரமணியம்
14 அகவை சசிகரன்
36 அகவை ரவிச்சந்திரன்
ஆகியோர் படுகாயமடைந்தனர்.கைவேலிப்பகுதியில் இன்று பிற்பகல் 4.45மணிக்கு ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் மக்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
35 அகவை கேதீஸ்வரன்
33 அகவை ப.விஜேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தவர்களாவர்.

நன்றி சங்கதி

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails