உயிருக்கு பயந்து ஓடும் தமிழர்கள் மீது குண்டு வீச்சு - சிங்கள ராணுவம் அட்டூழியம்
Posted On Tuesday 18 November 2008 at at 10:52 by Mikeஇலங்கையில் வடகிழக்கு பகுதியில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. குண்டு வீச்சுக்கு அஞ்சி, சாலையில் ஓடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது விமானப்படையினர் கொடூரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இலங்கை தமிழர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினர். பூநகரியை கைப்பற்றிய பின்னர், கிலாரி, முகமாலை, கண்டல் ஆகிய பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பூநகரியை ஒட்டியுள்ள பரந்தன் நகரில் குண்டு வீச்சுக்கு அஞ்சி, பெண்கள், குழந்தைகள், பள்ளி சிறுவர்கள் ஓடினார். அவர்கள் மீது விமானப்படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி, கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் மீதும், இலங்கை படையினர் நூறு தடவைக்கு மேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.