சிறிலங்கா துணைத் தூதரக் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத் திரைப்படத்தை அழிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் வழக்கு

அப்படியே, இங்கேயும் 2, 3 அலையுதுங்க தமிழனை அழிக்கனும் அப்படின்னு, கொஞ்சம் அவங்களையும் கவனிச்சா உங்களுக்கு புண்ணியமா போகும். அதுல ஒருத்தன் பக்கம், பக்கமா எழுதறான்யா, என்னனே அவனுக்கே புரியாது. அவனையும் பிடிச்சு போடுங்க சார்.

தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான "பிரபாகரன்" என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தை கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தொல்.திருமாவளவன் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

- பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது.

- இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலையால் லட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் அகதிகளாக அல்லற்படுகின்றனர். ஆனால் பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்திலோ, புலிகளின் போரினால் மிக மோசமான அகதி முகாம்களில் சிங்கள மக்கள் அவதிப்படுவதாக பொய்யாக சித்தரிக்கப்படுகிற காட்சிகள் உள்ளன.

- 3 தசாப்தகால இனப்போரின் வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் வழக்குத் தொடர்ந்துள்ள நாமும் நன்கு அறிவோம்.

- கொத்து கொத்தாக சிங்களவர்கள் கொல்லப்படுவது போலவும் இடம்பெயருவதும் போலவுமான காட்சிகள் அனைத்துமே மிகப் பொய்யானவை மட்டுமல்ல பாரிய கற்பனையும் கூட.

- சில காட்சிகளில் "சிறார்களை" கொண்டு இனப்படுகொலை செய்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதனைவிட மிக மோசமாக களமுனையில் கொல்லப்பட்ட சிறார்களுக்கு பாடசாலை சீருடைகளை அணிவித்து பள்ளிக்குழந்தைகளை இராணுவம் கொன்றதாக புலிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செஞ்சோலை என்ற சிறார் காப்பகத்தின் மீது சிறிலங்கா வான்படையின் 16 வான்குண்டுகள் தாக்குதல் நடத்தியதால் 50-க்கும் மேற்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஆயுதப் பயிற்சிக்குச் சென்ற சிறார்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியது.

ஆனால் ஐ.நா.வின் சிறார் அமைப்பான யுனிசெஃப், பாடசாலை சிறார்களே படுகொலை செய்யப்பட்டோர் எனக்கூறியது.

இப்படத்தில், சிறிலங்காவின் பொய்ப் பிரச்சாரத்தை தூக்கி நிறுத்தும் வகையிலேயே வன்மத்துடன் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

- இப்படத்தின் நோக்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று இப்படத்தின் இணையதளத்திலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று குமுதம் றிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

- இப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் பதனீட்டுச் செயற்பாடுகளுக்கான பணிகள் ஜெமினி கலையகத்தில் நடைபெற்றது. இதற்கு எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது நிலைமையை சீராக்க காவல்துறையினர் அங்கு வந்தனர். காவல்துறை துணை ஆய்வாளர் முன்னிலையேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்படும் என்று படத்தின் இயக்குநர் துசாரா பீரிஸ் உறுதியளித்திருந்தார். கடந்த 27 ஆம் நாள் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு படம் திரையிடப்பட்டது.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணனும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் படம் இது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு துசாரா பீரிஸ் கலந்து கொள்ளவில்லை.

- உலகத் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலான இப்படத்தை ஜெமினி வண்ணக் கலையகத்தை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று கடந்த மார்ச் 28 ஆம் நாள் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு முறைப்பாடு செய்திருந்தோம்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்படைத் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் ஜெமினி கலையகத்தினர், சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தினர் அப்படத்தின் பிரதிகளை தம்மிடமோ அல்லது தாம் குறிப்பிடும் நபர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களினது உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்கா துணைத் தூதரகம் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

அப்படத்தின் பிரதிகளை வெளியே கொடுத்தால் பல இடங்களில் திரையிட வாய்ப்பு உண்டு. இது இலங்கையில் இன மோதலை மேலதிகமாக மிக மோசமாகத்தூண்டி விடும்.

அதனால் தமிழ்நாட்டில் 1980-களில் நடந்தது போன்ற உணர்வுமிக்க போராட்டங்களும் நடைபெறும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொதுமக்களினது இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலையும்.

இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிப்பதுடன் படத்தின் பிரதிகளை எவரிடமும் கொடுக்கக்கூடாது என்று ஜெமினி கலையகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும் சிறிலங்கா துணைத் தூதரகத்தின் அழுத்தங்களுக்கு அமைய மத்திய மற்றும் மாநில உள்துறைச் செயலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெமினி கலையகத்திற்கு உத்தரவிடுவதைத் தடுக்க வேண்டும்.

அத்துடன் இப்படத்தின் பிரதிகள் மற்றும் மின்னனு பேக்கப் உள்ளிட்ட அனைத்துவகையானவற்றையும் மத்திய உள்துறைச் செயலகம் கைப்பற்றி அழிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடக் கோருகிறோம் என்று அதில் திருமாவளவன் கோரியுள்ளார்.

தொல்.திருமாவளவனுக்காக சட்டவாளர்கள் கோபிகிருஷ்ணா என்ற ஆர்வலன், பொன். இரவி என்ற இளந்திரையன், கே.பாலகிட்ணன் என்ற இளமாறன், இ. அங்கையற்கண்ணி, சிவலிங்கம், சுரேசு என்ற அகரன் ஆகியோர் இம்மனுவைத் தாக்கல் செய்தனர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails