தமிழ் நாட்டு மக்களே மீண்டும் நமக்கு ஒரு பெருமை ? நன்றி பகலவன்

தமிழ் நாட்டு மக்களே மீண்டும் நமக்கு ஒரு பெருமை ?என்னவென்று யோசிக்கிறிர்களா?ஆம் நாங்கதான் பெரிய ரவுடி என்ற பெருமை .வாய்க்கால் வரப்பு சண்டை, சொத்துத்தகராறு போன்றவற்றில் நடக்கும் படுகொலைகள் தவிர்க்கமுடியாதது எனக் கருத வாய்ப்புண்டு. ஆனால் சமிப காலமாக நடுரோட்டில் பட்டப்பகலில் ரவுடிகள் களமிறங்கி, கொலைக் குற்றங்களில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது இதை பற்றிய  நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பகலவன் குழுமத்தின் ஒரு அலசல் .

         பல
இளைஞர்கள் சினிமாவை பார்த்து தமது எதிர்காலத்துக்கு ரவுடி பாதையே சிறந்தது என முடிவு செய்கிறார்கள் தமிழகத்தின் இந்த நிலைக்கு தமிழ் சினிமாவும் மிக முக்கிய காரணம். இந்தி படத்திலோ ஆங்கிலப்படத்திலோ தமிழ் அளவிற்கு ரவுடிகளை மைய்யப்படுத்தி படங்கள் ஏடுப்பதில்லை . ரவுடியாயிருந்தால் மக்களிடத்தில் மரியாதை வரும் என்ற விஷத்தை தமிழ் சினிமா விதைக்கிறது.

                      தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டகாசம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடுவீதியில் பகல் நேரத்திலேயே ரவுடிக்கும்பல் நடத்திய கொலை சம்பவங்கள் கடந்த 10 நாட்களில் மட்டும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளன.கொடுமையின் உச்ச கட்டமாக நேற்று நெல்லை அருகே போலீஸ் எஸ்.ஐ ஒருவரே கொடூரமாக ரவுடிகளால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ரவுடிக்கும்பல் திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களை கொண்டு போலீஸ் அதிகாரியை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றுள்ளனர்.

ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை என்றால், சராசரி மனிதனின் பாதுகாப்புக்கு அங்கே என்ன உத்தரவாதம் இருக்கிறது என சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் முணுமுணுத்தனர்.

            கொலை சம்பவ இடத்தை சுடச்சுட மாநில அமைச்சர்களே பார்வையிட்டுள்ளனர். எந்த பின்னணியில், யாருடைய ஆதரவுடன் இத்தனை துணிச்சலாக பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளிலேயே களமிறங்கி படுகொலைகளை செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

           பலமான போலீஸ் படையையும், உளவு மற்றும் புலனாய்வுத் துறைகளையும் நிர்வகித்து வரும் தமிழக அரசுக்கு இந்த சமூகவிரோத கும்பலின் பின்னணியை கண்டறிந்து ரவுடிசத்தை வேரறுக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி சாதாரண பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

நேற்றைய தினம் போலீஸ் எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டதற்கு சற்று முன்பு புதன்கிழமை நாகர்கோவிலில் பெருவிளை மோகன் என்ற பிரபல ரவுடி இதே போல் நடுரோட்டில் கூட்டாளிகளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

கடந்த 1996ம் ஆண்டு நாகர்கோவில் சிறையில் புகுந்து ரவுடி லிங்கத்தை வெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவன் பெருவிளை மோகன். நடுவீதியில் ஏதோ சினிமா ஷூட்டிங் நடத்துவது போல சாதாரணமாக 'போட்டுத்தள்ளிவிட்டு' நழுவியது மற்றொரு ரவுடி கும்பல்.

        இந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் முன்பும் இதே போலவே சென்னை தரமணி அருகே 11 பேர் கொண்ட ரவுடிக்கும்பல், ஜெயபதி என்ற தங்களின் விரோதியை நடுரோட்டில் சுற்றி வளைத்து சராமரியாக வெட்டி சாய்த்தனர். அதே போல் கடந்த 28ம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூச்சிவிளாகத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரை ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்த போது, ரவுடிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். ஜெயக்குமார் உடலில் 35 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடிதுடித்து இறந்தார். பல்வேறு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய ஜெயக்குமார் போலீஸ் தேர்வு கூட எழுதியிருக்கிறார்.

                இதேபோல் டிசம்பர் 21ம் தேதி தண்டையார்பேட்டையில் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த முருகன் என்ற ரவுடியை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓடஓட விரட்டி வெட்டியது.ரத்தவெள்ளத்தில் முருகன் சாய்ந்ததும், ஆட்டோவில் கும்பல் தப்பியது. இதுவும் ரவுடிகளின் முன்விரோதத்தால் நடந்த கொலை என கூறப்பட்டது. இதற்கிடையே, மதுரையில் பிரபல ரவுடியை கொன்று, அவரது வீட்டுக்கு அருகே பிணத்தை புதைத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

                 இவ்வாறு தொடர்ச்சியாக ரவுடிகளின் படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பரவலாக அரங்கேறி வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் 6க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளன. சென்னையில் மட்டும் 350 புதிய ரவுடிகள் இந்த ஆண்டு களத்தில் இறங்கியருப்பதாக பேட்டி வேறு கொடுத்திருந்தார்கள் போலீசார்.போலீஸ் ஒரு ரவுடி என்பதால் தான் இந்தப்பிரச்சினை.

ரவுடிகள் தங்களுக்குள் அடித்து சாகட்டுமே என போலீஸ் 'சிறப்பு வியூகம்' அமைத்து வேடிக்கை பார்க்கிறதா அல்லது ரவுடிகள் உண்மையில் சுதந்திரமாக தங்களின் தாதா ராஜ்ஜியத்தை நடத்துகிறார்களா என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.

        திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் இது சாதாரணம் .கருணாநிதி பிறந்த நாளன்று சிறையிலிருந்து பத்து ரௌடிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.ஜெ அராஜக ஆட்சியில் தருமபுரி பேருந்தில் எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளை எரித்த ரவுடிகளை ஜெ. ஆட்சியில் காப்பாற்ற முயற்சித்த கதை ஊரே அறிந்த விஷயம்.இன்னும் நீதிக்காக அந்த பெற்றோர்கள் நிதிமன்ற வாசலில் காத்திருப்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

       
இன்றைய நிலையில் ரௌடிகளே  மத்திய அமைச்சர்களாகவும் மாநில அமைச்சர்களாகவும் இருக்கும் பொழுது இதுவும்  நடக்கும் , இதற்கு மேலும் நடக்கும்காவல்துறையினர் நினைத்தால் இதுபோன்ற நிகழ்வுகளை வேறோடு அறுக்க இயலும். ஆனால் இங்கே அவர்கள் ஆட்சியாளர்களின் ஏவல் நாயாகத்தானே இருக்கிறார்கள்.

 

 எப்போது காவல்துறை தனது பொறுப்பை உணர்ந்து, தாங்கள் அரசியல்வாதிகளின் அடிமை இல்லை, தங்களுக்கு சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்து மக்களின் சுதந்திரத்தைக் காக்கும் கடமை உள்ளது என்ற எண்ணம் வருகிறதோ அப்போதே  நாட்டில் அமைதி நிலவும். எல்லாவற்றுக்கும் சிபாரிசு, லஞ்சம், ஊழல், அராஜகம், அத்துமீறல், அடக்குமுறை, அரிச்சுவடி கூடப் படிக்காத அரசியல்வாதிகளின் மிரட்டல். இப்படி இருக்க சாதரண பாமரன் இதை எதிர்த்து எப்படி போராட முடியும்.

 

  நிர்வாகத்திலும், அரசாங்கத்திலும் தனியார் துறையில் இருப்பதுபோல, பணிச் செயல்பாடு ஆய்வு முறையை செயல்படுத்தி, அதனை மிகக் கடுமையாகக் கண்காணிக்கணும்.தவறு செய்யும் அதிகாரிகளின் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பது, பணிநீக்கம் செய்வது என்று கடுமையான சட்டங்களை புகுத்தி ஒழுங்குபடுத்தலாம். நிர்வாகம் முழுவதும் சென்னையில் மட்டுமே குவித்திடாமல், பரவலாக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்கள் மட்டுமல்ல, அந்த அதிகாரத்தைச் சரிவரப் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் .அப்படி இல்லை என்றால்  உடனடியாக நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்.

             இந்த மாதிரியான கொலைகளுக்கு சினிமாவே காரணம். மந்திரிகள் முன்பு சப் இன்ஸ்பெக்டர் வெட்ட படுகிறார் என்றால் சினிமாவில் வரும் வன்முறையே காரணம். சமுதாயமும், சென்சர் போர்டும், மக்களும் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் நாளை நமக்கே நடக்கும்.


              மக்களே, நீங்கள் காசை வாங்கிகொண்டு வோட்டை போட்டீர்கள் இப்பொழுது அவர்கள் செலவு இல்லாமலேயே சினிமா கிளைமாக்ஸ் காட்டுகிறார்கள். இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இன்னும் நிறைய காட்டுவார்கள் அதை இலவச தொலை காட்சியில் பார்த்துகொண்டு அடிமையாக வாழ வேண்டியது தான் .




 
 

Posted in |

2 comments:

  1. புரட்சிகர தமிழ்தேசியன் Says:

    வேகம் வேகம்...அய்யா தமிழினத்திற்கு முடிந்ததை செய்யுங்கள்..

    11.01.2010 திங்கட்கிழமை - இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படப்போகிறார்களா?
    மூலம்:http://chinthani.blogspot.com/2010/01/11012010-255.html
    புரட்சிகர தமிழ்தேசியன் -தமிழ்நாடு, திருவண்ணாமலை


    நடந்தே விட்டது .. இனி ஏதாவது செய்ய முடியுமா?

    அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரச்சென்று, தற்போது இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களிடம் சிறிலங்காவின் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகளுக்காக குரல்கொடுக்கும் ஒருவரை மேற் கோள்காட்டி அவுஸ்திரேலியா பத்திகையான "தி ஏஜ்' செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்தோனேஷியாவிலுள்ள சிறீலங்காத் தூதரகத்தைச் சேர்ந்த கப்டன் கபில் மற்றும் இரு அதிகாரிகள்கள் இலங்கை அகதிகள் எண்மரிடம் விசாரணை நடத்தியதாக அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த சாரதா நாதன் தெவித்துள்ளார்.

    மேற்படி அதிகாரிகள் இலங்கையிலுள்ள தமது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான அகதிகளின் அந்தரங்கத் தகவல்கள் குறித்து அகதிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சாரதா நாதன், மேற்படி அகதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்குமாறு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரை வலியுறுத்தியுள்ளார்.

    புகலிடம் கோருவோர் இலங்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் நிலையில் அவர்களை சிறீலங்கா விசாரிப்பதற்கு இந்தோனேஷியா அனுதிக்கக் கூடாது எனவும் நாதன் கூறியுள்ளார்.
    "அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் அந்தஸ்து தொடர்பான அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தோனேஷியா கையெழுத்திடவில்லை. மேற்படி புகலிடம் கோருவோர் இந்தோனேஷி யாவில் பாதுகாப்பாக இல்லை. அகதிகளுக்கு ஒரு நாட்டில் புகலிடம் அளிக்கும் ஒரு நாட்டில் அதற்கான செயன்முறைகள் மேற்கொள்ளப்படுவதற்காக அவர்கள் உடனடியாக அவுஸ்தி ரேலியாவுக்கு அழைத்துவரப்பட வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.

    இந்தோனேஷியாவில் இலங்கையர்கள் 244 பேர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் பலவாரங்களாக தொடர்ந்தும் படகிலேயே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் தொடர்பான விசாரணைகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெற வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். மேற்படிஅகதிகளை படகிலிருந்து வெளியேறச் செய்வதற்காக படகிற்கான நீர் விநியோகத்தை நிறுத்தியதாக கடந்த வருடம் இந்தோனேஷிய அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    http://www.varudal.com
    கீழ் காணும் எண்களுக்கு வேண்டுகோள்களை பேக்ஸ் மூலமாக தமிழ் உணர்வாளர்கள் அனுப்பி வையுங்கள்

    Phone: +62-21-3141308
    Fax: +62-21-314-5251

  2. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails