இறையாண்மை, பயங்கரவாதம்- மன்மோகன், மகிந்தவின் வார்த்தை விளையாட்டு

இறையாண்மை- இது குறித்து இந்தியாவுக்கு ஒரு பாடம் எடுக்கலாம்.

பயங்கரவாதம் - இது குறித்து இலங்கைக்கு ஒரு பாடம் எடுக்கலாம்.

மன்மோகனும், மகிந்தவும் கண்டிப்பாக முதல் வரிசையில் உட்கார்ந்து கவனிக்க வேண்டும்.

இறையாண்மை , ஒரு இனம் கண் முன் அழிவதை கண்டும், காணாமல் இருக்க வேண்டும். அந்த இனம் அழிய அனைத்து ஆயுதம், ஆட்கள் கொடுக்கலாம்.அந்த இனம் அழியும் வரை அதற்கு அனைத்து உதவிகளும் கொலைகாரர்களுக்கு செய்வது. யாரும் கேட்டால், அது அந்நாட்டு உள் விவகாரம் என மழுப்புவது.

உள்நாட்டு விவகாரத்துக்குதான் இவர்கள் ஆயுதம், ஆட்கள் எல்லாம் அனுப்பினார்களா.

பயங்கரவாதம், அரசாங்கம் பண்ணுவதெல்லாம் தீவிரவாத ஒழிப்பாம். செஞ்சோலை ல குண்டு போடுவது ஆஹா என்னமா ஒழிக்கறாங்க. மக்கள் குடியிருப்புகளில் குண்டு, பாடசாலைகளில் குண்டு, மக்கள் அன்றாட தேவைக்கு பயன்படும் பாலங்களை உடைப்பது எப்படியெல்லாம் ஒழிக்கறாங்க தீவிரவாதத்தை. இவை அனைத்துமே நடப்பதெல்லாம் தமிழ் மக்களிடமே. இதுதான் இன ஒற்றுமையா. இவர்களுடன் எப்படி ஒரே நாட்டில் இருப்பது.

அரசாங்கத்திடம் இருந்து இவர்களை காப்பாற்றுவர்கள் தீவிர வாதியாம், பயங்கரவாதமாம்.

Posted in |

2 comments:

  1. வெத்து வேட்டு Says:

    அண்ணே வாங்க பஸ் கோயில் பள்ளி வாசல் கடை இதுங்களுக்கு குண்டு வைப்போம்..ஆனா அதை எல்லாம் உரிமை போராட்டத்திலே சேர்த்துக்குவோம்
    தமிழனை காக்க மான்சிங் தேவையில்லை ..சூரிய தீவன் இருக்கிறார்.. :) :)

  2. Mike Says:

    வணக்கம் வெத்து வேட்டு அண்ணே, உங்களின் கருத்துக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி அண்ணே.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails