கருநாகம் உலக செம்(கனி)மொழி மாநாட்டிற்கு அழைப்பு!..

உடன் பிறப்பே..

நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்..

இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை பார்த்து எகத்தாளம் இடுவதை கண்டாயோ.கழக கொள்கை என்னவேன்று கேட்கிறார்கள்.. கழகம் ஒரு குடும்பம் என்றார் அண்ணா.. இன்று அதே தான் நாமும் சொல்கிறோம் குடும்பம்தான் கழகம்..
டெல்லிக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரியாம்..
தமிழ்நாட்டு இளித்தவாயவர்களுக்கு ஸ்டாலினாம்..
ஈழ உறவுகளுக்கு கனி மொழியாம்..
கலைத்துறைக்கு உதயநிதியாம்..
மக்களை எந்நேரமும் மயக்கி சினிமா மோகத்தில் வைத்திருக்க தயாநிதியாம்..
ஊரை கொள்ளை அடிக்க எனது அமைச்சர்களாம்..
இத்தாலிகாரிக்கு புடவை துவைக்க நானாம்..
மக்களை எருமை மாடுகளாக வைத்திருக்க நீயாம்..
காவிரி கைவிட்டு போனால் என்ன?
முல்லை பெரியாறு அணையை பெயர்த்தால் என்ன?
பாலாறு பணால் ஆனால் என்ன?
ஈழ தமிழன் செத்தால் என்ன?
தமிழ் மீனவன் செத்தால் என்ன?
எவன் செத்தால் நமக்கென்ன? நமக்கென்ன?
தமிழ் தமிழ் என்பதே ஊரை அடித்து உலையில் போடும் நமது தாரக மந்திரம்..
பார்பானை திட்டுவது நமது கொள்ளை அடிப்பதை பொறுக்காமல் இருப்பவர்கள் மீது எரியும் எறிகணைகள்..
தேதிகளும் ..பழையநிகழ்வுகளும் நாம் தப்பிக்கும் வழிமுறை..
நடிகைகளின் குத்தாட்டம் நம் கண்ணை குளிர்ச்சி செய்யும் அருமருந்து..
கடிதமும் தந்தியும் ஊரை ஏமாற்றுவதற்கு கிடைத்த ஆயுதங்கள்(நம்து அமைச்சர் ராசாவுக்கு வருமானமும் கூட)..
இந்தியாவை எப்படி பாகிஸ்தான் ஒற்றுமையாக வைத்திருக்கிறதோ..
அதே போல் நம்மை ஜெயலலிதா ஒற்றுமையாக வைத்திருப்பார்..
இன்னும் பல சொல்லிகொண்டே போகலாம் ..


இது போகட்டும்..கழக ஆட்சியில் டாஸ்மார்க்கு உன் பகுதியில் திறந்திருக்கிறதா? நீ விரும்பிய உற்சாக பானம் தங்கு தடையின்றி கிடைத்ததா?கழக ஆட்சி அளித்த 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிர் செய்து ..நாய் கூட சாப்பிட மறுக்கும் 1 ரூபாய்க்கு கொடுத்த புழுத்த அரிசியை பொங்கி.. தின்று ..இலவச வண்ண தொல்லைகாட்சி பெட்டியில் மானாட அடுத்தவன் பொண்டாட்டி மார்பாட நிகழ்ச்சியில் லயித்திருக்கின்றாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன் கடமை ஒன்று உண்டல்லவா?

கோவை கிடுகிடுக்க .. உலகம் நடுநடுங்க..கனிமொழியாம் செம்மொழி மாநாட்டுக்கு ஊரை அழைத்துவா.. உன் வீட்டை அழைத்துவா.. உன் உறவை அழைத்துவா..
 
நன்றி
தமிழ்தேசியன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails