தென்னை மரத்தில் தேள்கொட்டினால், பனை மரத்திற்கு என் நெறிகட்டுகிறது ?

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் புலம் பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டதை விடவும் இந்த முனைப்புகள் பாரதூரமானை என்று இந்திய அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் கருதுகின்றனர்.

இதனை குழப்பும் முகமான சில நகர்வுகளை இந்தியா ஆரம்பித்துள்ளதாகவும் தமது ஆலோசனைக்கு அமைவாக செயல்படும் ஓருவை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு இந்தியா விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்பொதுள்ள இரு பிரதான வேட்பாளர்களிலும் இந்தியாவின் தெரிவாக மகிந்த ராஜபக்ச உள்ளதால் அவருடைய வெற்றிக்கான தனது முழுமையான ஆதரவை இந்தியா வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன் காரணமாகவே இந்தியாவால் கையாளப்படும் புளொட்,,ஈ.பி.ஆர்எல்.எப் போன்ற மாற்றுக் கட்சிகள் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை புலம் பெயர் நாடுகளின் வாழும் தமிழ் மக்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர் குலைப்பதற்கு தமிழ் தேசிய கூட்மைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தவும் இந்திய முயல்வதாகவும் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு தமிழ் மக்களை குழப்பத்தில் தள்ளி தமிழீழ தனியரசுக்கான கோரிகையினை மழுங்கடிப்பதற்கு இந்தியா முயல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை விடவும் வெளிநாடுகளின் நடைபெற்றும் வரும் தமிழீழ தனியரசுக்கான அனுமதி கோரும் தேர்தல் இந்தியாவிற்கு நெருக்கடியாக மாறியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

இலங்கையில் தனது விருப்பதற்திக்கு அமைவான ஒரு அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச நாடுகளின் ஊடாக புலம் பெயர் தமிழர்கள் ஏற்படுத்த முனையும் அரசியல் அழுத்தங்களை எதிர் கொள்வதற்கு இந்தியா முனைவதாகவும் இந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.


Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails