நக்கீரனுக்கு மிரட்டல்:பத்திரிக்கையாளர்கள் கண்டனம்

இலங்கையில் உள்நாட்டுப்போரை தொடர்ந்து அங்கு அப்பாவிகள் கொல்லப்பட்டும் மனித உரிமைகள் மீறப்பட்டும் வருகிறது.


தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் அனைத்து பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4மணியளவில் நடந்தது.


100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். ராஜபக்சேவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.


ஆர்ப்பாட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


1,இலங்கையில் போரை எதிர்த்து எழுதியதாக கொலை செய்யப்பட்ட 16 பத்திரிக்கையாளர்கள் மரணம் குறித்து ஐநா மன்றம் விசாரிக்க வேண்டும்.


2, இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி மற்றும் தமிழன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.


3, ராஜபக்சேவை விமர்சித்து நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான முகப்பு அட்டை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக சென்னையில் இயங்கும் இலங்கை துணைத்தூதரர் அம்சா மிரட்டல் அனுப்பியதை வன்மையாக கண்டிப்பததோடு அக்கடிதத்தை திரும்பப் பெற வேண்டும்.


5, உதயன் நாளிதழ்,சுடரொளி நாளிதழ் ஆசிரியர் வித்யாதரனை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நன்றி நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails