செருப்படி மக்களிடம் எளிதாக வாங்குவது எப்படி?

காங்கிரசால் தான் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது: தங்கபாலு

இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விளக்க இலங்கைத் தமிழரும் மத்திய அரசும் என்ற தலைப்பில் சென்னை மாங்கொல்லையில் 15ஆம் தேதி மாலை காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு, நேரு காலம் முதல் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு யாரெல்லாம் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்களோ, அவர்களுக்கு ஒன்று கொல்லிக்கொள்கிறேன். காங்கிரஸ் அரசால் தான் இலங்கையில் தமிழ் இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் முகர்ஜி சென்றார். 48 மணி நேர போர் நிறுத்தமும் அறிவிக்கப்பட்டது. அப்போதே அப்பாவி தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தால், மீண்டும் போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கலாம். இலங்கையில் வாழும் தமிழர்களை என்ன விலை கொடுத்தாலும் காப்பாற்றுவோம் என்றார்.

நன்றி : நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails