பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

Posted in |

2 comments:

  1. ஆதவா Says:

    நல்ல செய்தி....
    வெற்றி தொடரட்டும்..

  2. Anonymous Says:

    ottu motha singala naaykalai azhithalum en manasu aaraathu avvalavu veriyaka vullathu, viduthalai pulikalukku en vazhthukkal

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails