மலையாளி, கன்னடர், தெலுங்கர் அனைவரும் வருக தமிழனை காப்பற்ற
Posted On Monday 1 December 2008 at at 11:34 by Mikeவாழ்க தமிழ், வளர்க தமிழ் என்று சொல்வது இந்திய இறையாண்மைக்கு எதிர்ப்பானதாம் ஒரு கருங்காலி சொல்கிறது.
தமிழனை அடக்கி ஆள்வது வேறு யாருமல்ல, இன்னொரு தமிழன் என்று சொல்லி கொள்(ல்)பவனே. நீங்கள் வந்து நீதி சொல்லுங்கள், நாங்கள் என்றாவது தனிதமிழ் நாடு வேணும் சொல்கிறோமா, ஒரு இனம் அழிவதை தடுத்து நிறுத்த தானே கேட்கிறோம். இதற்கு ஏன் இறையாண்மை சாயம் பூசுகிறார்கள்.
எந்த ஒரு மிருகத்துக்கும் இருக்கும் ஒரு பாச உணர்வு ஏன் ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லை. எங்களில் சில கருங்காலிகள் இருக்கின்றன, ஒரு இன அழிவுக்கு குரல் கொடுக்கும் போது வந்து இறையாண்மை என்ற வட்டமிடும் கழுகாக கொத்தி, கொத்தி குதறுகின்றன. கார்கிலுக்கு அள்ளி கொடுத்த நாங்களா நாட்டை துண்டாட நினைக்கும் இறையாண்மை துரோகிகள்.
சரியான கேள்வி!