இதுவல்லவோ பத்திரிக்கை தர்மம், வாழ்க ஜனநாயகம்
Posted On Tuesday 2 December 2008 at at 05:33 by Mikeதினமுரசு வாங்க மறுத்தவர்களை சிறிதர் திரையரங்கு முகாமிற்கு வருமாறு ஈ.பி.டி.பி உத்தரவு
சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பியினரால் தினமுரசு வார இதழ் வெளியிடப்படுகின்றது. இந்த இதழை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், யாழ் வேலணைப் பகுதியில் தினமுரசுப் பத்திரிகை வாங்க மறுத்ததாக கூறி 5 பேரின் அடையாள அட்டைகளை ஈ.பி.டி.பி யினர் பறித்துவிட்டு குறிப்பிட்ட 5 பேரையும் யாழ்ப்பாணம் சிறிதர் திரையரங்கிலுள்ள தமது முகாமிற்கு வருமாறு எச்சரித்துள்ளனர். இவர்களது எச்சரிக்கையால் அடையாள அட்டையை பறிகொடுத்தவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=723&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51