சரத் பொன்சேகா பேசிய பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்தது - ஆனால் இராணுவத்தளபதி மன்னிப்பு கேட்கவில்லை
Posted On Tuesday 9 December 2008 at at 08:04 by Mikeஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை