சுடப்படமாட்டார்கள் என்ற உறுதி வேண்டும் : தா.பாண்டியன்
Posted On Wednesday 3 December 2008 at at 05:08 by Mikeஇலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்துவதற்காக நாளை தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்கிறார்கள். இந்த அனைத்து கட்சி குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பங்கேற்பேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்,
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்துவதற்காகவும் போர் நிறுத்தம் வேண்டி பல்வேறு அமைப்புகளும் வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இனி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அனைத்து கட்சி குழுவில் பங்கேற்கிறேன்.
இலங்கை ராணுவம் சுடமாட்டார்கள் என்ற உறுதியையும் ஈழத்தமிழர்கள் சுடப்படமாட்டார்கள் என்ற உறுதியை வாங்குவதற்காகவும்தான் நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன். பிரதமர் இந்த உறுதியை அளிப்பார் என்றுதான் எதிர்பார்க்கிறோம். அவர் அந்த உறுதியை அளிக்காவிட்டால் தமிழக மக்கள் கடும் கோபம் கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி’’. என்று தெரிவித்துள்ளார்.