மாற்றுக்கருத்துச்சுதந்திரத்துக்கு மதிப்பளிப்போம்

கண்டிப்பாக, ஆனால் எதில் மாற்று கருத்து என்பதில் தெளிவு வேண்டும், தமிழ் மக்களை எதை வைத்து கொல்வது குண்டு போட்டா, வெள்ளை வான் மூலம் கடத்தி அல்லது அவனை நாய் மாதிரி அலைய விட்டே கொல்லனும் என்பதில் எந்த மாற்று கருத்துக் கூடாது நண்பரே, அவர்களும் மனிதர்களே மனிதர்களே மனிதர்களாக பாருங்கள் முதலில் அவன் உயிரை காப்பாற்றுங்கள். இந்த தினமலர், சோ, துக்ள்க், தேசம்.னெட் எல்லாம் இதுல மாற்று கருத்து கேட்டால் எங்கையா போவது.

கொல்வதை நிறுத்துங்கள் முதலில், பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் மாற்று கருத்து குறித்து விவாதிப்போம். அதை விட்டு முதலில் கொல்வோம் என்பது எந்த விதத்தில் நியாயம்.

Posted in |

4 comments:

  1. Anonymous Says:

    மைக் சார் அவரோட கிண்டலை நீங்க புரிஞ்சுக்கலன்னு நெனைக்கேன்.

  2. Mike Says:

    மன்னிக்கவும் நண்பரே நான் தவறாக புரிந்திருந்தால். எந்த மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பது இந்த பதிவின் செய்தியாக போகட்டும் இந்த தமிழின துரோகிகளுக்கு.

  3. அது சரி(18185106603874041862) Says:

    //
    கொல்வதை நிறுத்துங்கள் முதலில், பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் மாற்று கருத்து குறித்து விவாதிப்போம். அதை விட்டு முதலில் கொல்வோம் என்பது எந்த விதத்தில் நியாயம்
    //

    மிகச் சரி..

    ஆனால் தின மலர், சோ சொல்வதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்பது என் எண்ணம். நானும் தின மலர் படிப்பதுண்டு, சோவின் துக்ளக்கும் சில நேரங்களில் படிப்பதுண்டு.. அவரின் சில கருத்துகளில் உடன்பாடு இருந்தாலும் இலங்கை நிலவரத்தில் அவர் கருத்துகள் குறித்து எனக்கு எந்த உடன்பாடும் இல்லை..

    நான் சொல்ல வருவது என்னவென்றால் தினமலர் படித்தோ, சோ சொல்வதை கேட்டோ யாரும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று தோணவில்லை.. இவர்களை ஒதுக்கிவிட்டு போகலாம் என்பது என் கருத்து!

  4. Mike Says:

    வருகைக்கு நன்றி அது சரி அவர்களே, உண்மைதான் இந்த தமிழின துரோகிகளை அப்படியே குரைக்க விடவேண்டியதுதான். ஆனாலும் இவனுங்க ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை பத்திரிக்கை என்ற ஒன்றால் எப்படி ஏமாற்ற பார்க்கிறான் பாருங்கள். தமிழால் பிழைக்கும் இவர்கள் தமிழனுக்கே ஆப்பு வைப்பது எந்த விதத்தில் நியாயம். நன்றி கெட்ட மனிதர்கள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails