ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒக். 14 இல் அனைத்து கட்சிக்கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Posted On Thursday 9 October 2008 at at 12:39 by Mikeநன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி .....
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு உண்மை தமிழனின் நன்றிகள். நமது சகோதரர்களை காப்பற்ற இதுவே நல்ல தருணம். அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை பெற்று கொடுங்கள். தமிழீழத்தை சிங்கப்பூர் போல ஒரே வருடத்தில் மாற்றும் திறமை அவர்களுக்கு உள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக்கூட்டத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.10.08) தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும்- நிலையான அமைதி அங்கே உருவாகிடத் தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்- அங்கே இனப்படுகொலையும்- போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ள தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் 14 ஆம் நாள் மாலை 4:30 நிமிடத்துக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு தமிழர்களின் தார்மீக ஆதரவு ஈழத்தவர்களுக்கு கிடைத்தால் அங்கே கிடக்கும் உடலங்களில் கூட உயிர்ப்பின் மலர்ச்சி துளிர்விடும். அந்த பொன்னாள் தமிழீழம் பிரசவிக்கப் போகும் அந்த நாளுக்கு நிகரான சந்தோசத்தை எமக்கு வளங்கும் நாள்.
விழிவெள்ளப் பெருக்கோடு நனைந்திருக்கும் எம் உறவுகளை மகிழ்ச்சி வெள்ளம் ஆட்கொள்ள வந்த திருநாள்.
எம்சாவிலாவது நாம் அடையத்துடிக்கும் அற்புதம் அதுதான்!
தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தாங்கள் வெறும் பேச்சாளர்கள் அல்லர்,ஒற்றுமையாகச் செயல் படவும் கூடியவர்கள் என்பதை உலகுக்குத் தெரிய வைக்கும் தருணம்.
எந்தக் காரணம் கொண்டும் இதில் பங்கு பெறா விட்டால் உங்களைத் தமிழ் மன்னிக்காது,மறக்காது!