தமிழக சட்டப்பேரவையில் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்
Posted On Saturday 26 April 2008 at at 13:29 by Mikeதமிழக சட்டப்பேரவையில் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத்தில் அரசியல் நெடுக்கடிகள் நிறைந்த இந்தச் சூழலில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு உலக தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.