இலங்கை உயிரிழப்புகள் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் கவலை
Posted On Wednesday 13 February 2008 at at 12:47 by Mikeஇலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்படும் மற்றும் காயமடையும் பொதுமக்களின் எண்ணிக்கையானது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 6 வாரங்களில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட புதிய எண்ணிக்கை கூறுகிறது.
மேலும் சுமார் 270 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஒரு தற்கொலைத் தாக்குதலில் மாத்திரம் ஒரு உயர் பள்ளிக்கூடத்தின் பேஸ் போல் குழுவின் அரைவாசிப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் முறையாக வெளியேறியதை அடுத்து அங்கு வன்செயல்கள் அதிகரித்தன.