தமிழ்மணம், தமிழ் வலைபதிவாளர்களே உங்களுக்கு ஒரு கோரிக்கை
Posted On Monday, 13 October 2008 at at 11:36 by Mikeஈழ தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த்து அனைத்து அமைப்புகளும் போராட்டம் நடத்துகின்றது. நாம் என்ன செய்ய போகிறோம். கண்டிப்பாக வெறும் பார்வையாளராகவே இருப்போமானால் அது மனிதாபிமானமுள்ள யாருக்கும் அழகல்ல. வெறும் எழுத்துடன் நின்றுவிடாமல் அடுத்த கட்டத்துக்கு அனைவரும் செல்ல வேண்டும். எனக்கு தெரிந்த சில யோசனைகள்.
1) தமிழ் மணம் ஒரு நாள் உண்ணாவிரதம் ஏற்பாடு செய்ய வேண்டும், அனைத்து வலைபதிவர்களும் கலந்துகொள்ள வேண்டும்.
2) ஒரு நாள் அடையாள வலைபதிவு நிறுத்தம் பண்ணலாம்.
3) அனைத்து பதிவர்களும் ஈழதமிழர்களின் நிலை குறித்து ஒரு பதிவிட வேண்டும்.
4) முதல்வரிடம் நமது தமிழ் மணம் வலைப்பதிவுவர்கள் மூலமாக புகார் அளிக்கப்படலாம்.
உங்களின ஆதரவு ஈழதமிழர்களுக்கு ஒரு ஆறுதலை கொடுக்கும். உங்களின் யோசனைகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் மணமே, கண்டிப்பாக உன்னுடைய பதிலை எதிர்பார்க்கிறேன், எதுவாக இருந்தாலும்.
நன்றி.
mike எங்கள் பதிவுகள் கர்த்தால் அநுஸ்டித்தால் நரிகளின் பதிவுகள் அல்லவா தமிழ் மணத்தை நாறடித்துவிடும்!
//உங்களின ஆதரவு ஈழதமிழர்களுக்கு ஒரு ஆறுதலை கொடுக்கும். உங்களின் யோசனைகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன//
ஈழத்தமிழர்களுக்கான எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு!
அறவழிப் போராட்டங்கள் எதுவாயினும் கலந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்!
ஈழத்தமிழர்கள் எங்களின் ரத்தம்!
///அனைத்து பதிவர்களும் ஈழதமிழர்கள் நிலை குறித்து ஒரு பதிவிட வேண்டும்.///
இது நல்ல கருத்து; செய்யலாம்.
ஈழத் தமிழர் நிலை குறித்தும், தமிழக இந்திய அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எழுதலாம்.
///அனைத்து பதிவர்களும் ஈழதமிழர்கள் நிலை குறித்து ஒரு பதிவிட வேண்டும்.///
இது நல்ல கருத்து; செய்யலாம்.
ஈழத் தமிழர் நிலை குறித்தும், தமிழக இந்திய அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எழுதலாம்.
வணக்கம் தேவன் அவர்களே, உண்மைதான் நீங்கள் சொல்வது. எந்த போராட்டங்களிலும் இந்த குள்ள நரிகளின் பங்கு கணிசமாகவே உள்ளன, ஆனால் உண்மை ஒரு நாள் வெல்லும்.
இப்ப ஒரு வலைபதிவு குள்ள நரி எப்படி விம்மியே சாகுது தமிழர்களின் எழுச்சி கண்டு, இது மாதிரியே அது செத்தே போகும் யாருக்கும் எந்த பிரயோசனம் இன்றி.
சிக்கிமுக்கு, நாமக்கல் சிபி அவர்களே,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
/*அனைத்து பதிவர்களும் ஈழதமிழர்களுக்கு நிலை குறித்து ஒரு பதிவிட வேண்டும்.*/
நல்ல கருத்து அதை செய்யலாம்
ஈழம் என்றும் வாழும், விரைவிலே ஈழம் மலரும்.
//அனைத்து பதிவர்களும் ஈழதமிழர்களின் நிலை குறித்து ஒரு பதிவிட வேண்டும்.//
இதையே நானும் பரிந்துரைக்கிறேன். பதிவுப் போராட்டத்திற்கென ஒரு நாள் நிர்ணயித்து ஒரே நாளில் அனைவரும் பதிவுகள் மூலம் ஈழ விடுதலைக்கு ஆதரவினைத் தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து ஒரு தொடர் பதிவினையும் அறிவிக்கலாம்.
தொடர் பதிவாக
We are happy to participate if there is anything for tmaileelam.
ஆக்க பூர்வமாகச் செய்யக் கூடியவை:
1.ஆங்கிலம் மற்ற மொழிகளில் உண்மை நிலையைப் படங்களுடன் பல தளங்களில்
எழுதுதல்.
2.முக்கிய மின் முகவரிகளை இந்திய பிரதமர்,சோனியா அம்மையார்,பாராளுமன்றத் தமிழரல்லாத மற்ற உறுப்பின்ர்கள்,முக்கியப் பத்திரிக்கை எழுத்தாளர்கள் இவற்றை வெளியிட்டு அவர்களுக்குத் தொடர்ந்து செய்திகள் அனுப்பி வைத்தல்.
3.நல்ல நடு நிலை கருத்துக்களை எழுதியுள்ள மனித உரிமை போன்ற
வற்றை உலகெங்கும் அனுப்புதல்.
4.உலகெங்கும் உள்ள தமிழர்களை ஊக்குவித்து ஆங்காங்கே அரசு,பத்திரிக்க்கைகள்,பொது நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தமிழினப் படுகொலைப் படங்களைக் காண்பித்தல்.
இவற்றைச் செய்து வருவோருக்குத் தங்களாலான உதவிகளைச் செய்து வருதல்.
நம்மால் என்ன முடியும் என்ற பிற்போக்கு எண்ணத்தை உடனே உதறித் தள்ள வேண்டும்.
பொதுவாய் ஒரு பதிவை உருவாக்கி, அதில் தமிழ்மணம் பதிவர்களின் தமிழீழம் சார்ந்த கருத்துக்கள் இட்டு, அதை அவரவர் கையொப்பமாகக்கொண்டு, அனைத்தையும் சேர்த்து, தமிழக / இந்திய அரசுக்கு அனுப்பலாம்.
ஈழத்தமிழர்களுக்கான எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
thamilakathil intha puratchi india arasiyalil periya matrathai eRpaduththa pogirathu, puthiya thamileelam amaiya vazthukal.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கடையம் ஆனந்த், நளன்,நசரேயன்,பின்னூட்டம் பெரியசாமி, அனானி மற்றும் சுரேஸ் அவர்களே.
// அனைத்து பதிவர்களும் ஈழதமிழர்களின் நிலை குறித்து ஒரு பதிவிட வேண்டும்.//
இதுவரை பதிவுகளே போட்டதில்லை. (பின்னூட்டம் மட்டும்தான்).
பதிவுப் போராட்டத்திற்கான நாளினை தெரியபடுத்தினால் நானும் என் பதிவினை தெரியப்படுத்த வசதியாக இருக்கும். நன்றி
மிக்க மகிழ்ச்சி ஜுர்கேன் க்ருகேர் அவர்களே, கண்டிப்பாக தெரியபடுத்துறேன்.
ஈழத்தமிழர்களுக்கான எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு, வாழ்க தமிழீழம்.
தமிழர் வலைப்பதிவாளருக்கு,
தங்களின் கோரிக்கை புனிதமானது.
ஈழப்போராட்டம் என்பது தமிழர்கள் மேல் வலிந்து பேரினவாதம் திணித்த
போராட்டமாகும்.60 ஆண்டுகளாக அடுத்தடுத்து வந்திருந்த தென்னிலங்கை அரசெல்லாம் இனவாதப் பெருந்தீயில் தமிழனையே சுட்டெரித்துக் கொன்று குவித்த
நெடுங்கதையே நீள்கிறது.
தமிழன் ஆஸ்பத்திரியைக் கூட விட்டுவைக்கா அரசிற்கே அச்சாணியாகிப் போகிறது வெளிநாடு.
இத்தனைக்குப் பின்னும் எடுப்பார்
கைப்பிள்ளையென இரவற்திண்ணைகளில் குந்தியிருந்து குதுகலித்து என்ன பயன்.
உங்கள் முயற்சி பயன் தர வல்லது. வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்.