சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன்

நான் ஒரு இந்தியன் என்று சொல்லிக்கவே வாய் கூசுகிறது. எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது இந்த பொய், பித்தலாட்டம் எல்லாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இவர்களை என்ன செய்வது. தினமும் குண்டு போட்டு தமிழர்களை கொல்லப்படுவதை தடுக்க வழி தெரியவவில்லை, சிங்களவனுக்கு அடி பட்டிட குடாதுன்னு வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் இவனை என்ன சொல்வது. மனிதாபிமானமற்ற முட்டாள்கல்.

சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா இராணுவத்தினர், தமது தாக்குதல்களால் புலிகளின் ஒட்டுமொத்த மன உறுதியையும் சிதைத்துவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறாரகள்.

ஆனால், வவுனியா தாக்குதலை பார்க்கப்போனால் புலிகளின் மூத்த தளபதிகளோ போராளிகளோ எள்ளளவும் தமது உறுதியில் குலைந்துவிட்டதாக கணிப்பிடமுடியாது என்று அடித்துக்கூறவேண்டியுள்ளது.

புலிகளது மனஉறுதி தொடர்ந்து உச்ச நிலையிலேயே காணப்படுகிறது. அவர்களின் தளபதிகளின் நேர்த்தியான திட்டமிடலும் குறைந்த ஆள்பலத்துடனும் ஆயுத பலத்துடனும் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்களும் அவர்களின் வீரத்தின் வீச்சை வெளிப்படுத்தியிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போராட்ட வலுவை முற்றாக அழித்து போராளிகளின் மனஉறுதியை சிதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அண்மையில் கூறியிருந்தது.

இராணுவம் கூறியதைப்போல உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், புலிகளின் தளபதிகளினதும் போராளிகளதும் ஓர்மம் குறைந்திருக்கும். புலிகள் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்து அதன் உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து தப்பியோடியிருப்பர்.

அவ்வாறு ஏதாவது நடைபெற்றதா?

அதற்குரிய எந்த அறிகுறியும் புலிகள் அமைப்பிலிருந்து தென்படவில்லை.

பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து ஆயுதங்களை பெற்று ஓயாது சண்டையிடும் சிறிலங்கா படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் சளைக்காது சமரிட்டு வருகின்றனர்.

வன்னி மீது எத்தனை தடவைகள் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் சென்று தாக்குதல்களை நடத்தினாலும் அங்கிருந்து புலிகள் தொடர்ந்தும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

புலிகளின் இந்த தாக்குதல்களினால் - சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட - இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

ஈரானிடமிருந்து பெறும் பணத்தினால் பெருந்தொகையான ஆயுதங்களை தனது நேச நாடுகளிடம் பெற்று அவற்றை போரில் பயன்படுத்துவதில் மட்டும்தான் சிறிலங்கா படைகள் ஆசுவாசப்பட்டுக்கொள்கின்றன். இந்த வசதி புலிகளுக்கு இல்லை என்பது உண்மை.

விடுதலைப் புலிகளினது நேர்த்தியான திட்டமிடலையும் அரச படையினருக்கு எதிரான அவர்களது ஓர்மத்தையும் அண்மையில் இடம்பெற்ற வவுனியா தாக்குதல் தெளிவாக காண்பித்திருக்கின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் அனுராதபுரம் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று - ஒரு படி மேலே சென்று - வான் வழியாகவும் தரை வழியாகவும் - ஆட்லறி மூலமும் மிகவும் கவனமாக திட்டமிட்டு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட புலிகளின் வானூர்திகளை கொழும்பிலிருந்து சென்ற தமது சிறப்பு தாக்குதல் வானூர்திகள் சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்குரிய ஒளிப்பட ஆவணம் தம்மிடம் இல்லை என்று வான்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

அனுராதபுர படைத்தளம் மீதான புலிகளின் வான் தாக்குதலின்போதும் அது ஒரு கண்துடைப்பு தாக்குதல் என்றும் புலிகள் தமது இலக்கை அடையவில்லை என்றும் சிறிலங்கா அரசு முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் வெளிவந்த சுயாதீன அறிக்கைகள் இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பை வெளிக்கொண்டு வந்தது.

வவுனியா படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்திகள் ஆறு நிமிடங்கள் மாத்திரமே வவுனியா வான் பரப்பின் மேல் பறப்பில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, அவ்வளவு நேரத்திற்குள் கொழும்புக்கு தகவல் போய், அங்கிருந்து வந்து புலிகளின் வானூர்தியை தாக்கியழிக்க வல்ல வேகமான வானூர்திகள் எவையும் சிறிலங்காவிடம் இல்லை.

சிறிலங்கா இராணுவம் தாம் ஈட்டிய வெற்றிகளை பூதாகாரப்படுத்தி வெளியிட்டுவிட்டு தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைத்துவரும் வேளையில், விடுதலைப் புலிகள் ஆதாரங்களுடன் இழப்பு விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தாம் போரில் பாரிய இழப்புக்களை சந்தித்தாலும் கூட அதனை புலிகள் ஒருபோதும் மூடிமறைக்க முயற்சிப்பதில்லை.

இதனால்தான், விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை போராளிகளும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் நம்பகத்தன்மை உடையவையாக பார்க்கின்றனர்.

வவுனியா தாக்குதலை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கை, சிறிலங்கா அரசு விடுத்த அறிக்கையிலும் பார்க்க கூடுதல் நம்பகத்தன்மை உடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails