தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டனர்

Someone needs to check Muharjee works for India or Srilanka. He always try to save srilanka at any cost. கருணாநிதி விழிப்புடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீன்வர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது, தாம் பயணம் செய்த படகினை இலங்கை மீனவர்கள் குண்டு வீசி தகர்த்துவிட்டதாகவும் தாம் நீந்திக் கரை சேர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய இலங்கை மீனவர்களிடையே நல்லுறவு நிலவி வரும் வேளையில், மீனவர்களின் போர்வையில் இது போன்ற செயலை வேறு யாராவது செய்திருக்கக் கூடும் எனக் கூறுகிறார் தமிழ்நாடு புதுச்சேரி மீனவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் போஸ் அவர்கள்.

ஆனால் இந்தத் தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள்தான் எனவும், இந்திய மீனவர்கள் தமது கடல் எல்லையை தாண்டிச் சென்றதால்தான் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களைத் தாக்கியது இலங்கையின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இல்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் தவரட்ணம் கூறுகிறார். தமது மீனவர்கள் கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தான் செல்வதாகவும், எனவே இந்தத் தாக்குதலில் தமது மீனவர்களுக்கு தொடர்பு இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    appo enna mukargeeyum karunanithiyum ltte'ku Jaalraa podanuma???
    podang..neengalum..ungaloda iiilamum...athu thaane...naaluku naal kizhiyuthuuuu...

  2. Anonymous Says:

    அட வெண்ணை , மைக் சொல்றது ச ரிதான்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails